Sunday, July 12, 2009

இருளும் மெளனமும் இணைந்த வாழ்வு










ந. சத்தியபாலனின் - இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

-சு. குணேஸ்வரன்

கவிஞர் ந. சத்தியபாலன் (1956) அடிப்படையில் ஓர் ஆங்கில ஆசிரியர். கவிதை, சிறுகதை, பத்தி எழுத்து, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தனது ஆளுமையைச் செலுத்தி வருபவர். இவரின் ‘இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்’ என்ற கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.

2006 ற்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்த காத்திரமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதுவதற்குரிய அதிகபட்ச சாத்தியக் கூறுகளை சத்தியபாலனின் கவிதைகள் கொண்டுள்ளன. 1986 இல் இருந்து 2008 வரை எழுதப்பட்டவற்றுள் 41 கவிதைகளைக் கொண்டமைந்த இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்துமே மனித வாழ்வின் துயரத்தையும் ஆற்ற முடியாத சோகத்தையும் அதிகாரத்தால் அமிழ்ந்து போகும் மெளனத்தையும் பேசுவனவாக உள்ளன.

பார்த்தவுடன் அதிர்ச்சியூட்டக்கூடிய அட்டைப்படம். முகத்தின் மண்டையோட்டுப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆணி அறையப்பட்ட ‘நிக்சி நெக் ஒண்டி’ மரச்சிற்ப புகைப்படத்துடன் கூடிய தொகுப்பைப் பார்த்தபோது மிகவும் இறுகிய மனத்துடனேயே கவிதைகளுள் நுழைய முடிகின்றது.

இந்த நூற்றாண்டுத் துயரங்களில் ஒன்றாகிப் போன மனித அவலங்களையே அதிகமான கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் இருளையும் அதன் மெளனத்தையும், சொற்களும், சொற்களுள் தொங்கிக் கொண்டிருக்கும் வரிகளும், வரிகளுள் உறைந்திருக்கின்ற உணர்வுகளும் பேசமுயல்கின்றன. பேச முடியாத சொற்கள் கண்ணாடி முன் தெரியும் விம்பமாகி ஒரு கணத்திலேயே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இந்த நிலையிலேயே வாழ்வு பற்றிப் பாடுகிறார்.

“ஓசையெழாமல்

குழாய் வழி வழிந்து

வெளியேறிவிட்ட

தாங்கிக் தண்ணீராய்

வீணாகிப் போன வாழ்வு பற்றி

ஒரு கணம் துணுக்குறும் நெஞ்சு”

(மூன்று பொம்மைகள்)

வாழ்வு காலத்தோடு கரைந்து போகின்றது. அதுவே கருணையற்ற காலமாக எம்முன் விரிந்து கிடக்கிறது. இந்தக் காலங்களால் மனித வாழ்வு அலைக்கழிக்கப்படுகின்றது. என்றாலும் வாழவேண்டும் என்ற ஆசை, செடிகளின் வேரில் படிந்திருக்கும் ஈரம்போல் நெஞ்சில் கசிகிறது.

மெளனமாக நடந்து சந்தைக்குச் செல்லும்போது ‘அப்பா எனக்கு சொக்காவும்’ என்ற குழந்தையின் குரலும், நெஞ்சின் வலி பாரமாய்க் கனக்க மருந்தாய் தடவுண்ட தாயின் வார்த்தைகளும், பிரிந்து போன நட்பும் உறவும் மீண்டும் கைகோர்த்து மீள வருகின்ற போது வாழவேண்டும் என்ற ஆசை மனமூலையி;ல் ஓர் ஒளிப்பொட்டாக உள்ளிறங்குகின்றன. அழைப்பு, சிறகடிப்பு, பிறப்பு, தரிசனம் 1, கனவு ஆகிய கவிதைகளில் இந்தப் பண்பைக் கண்டு கொள்ளலாம்.

அரிதாரம் பூசி மெழுகப்பட்ட மனிதர்களின் பொய்முகங்கள் பற்றியும்> அவர்கள் அணிந்து கொள்கின்ற கிரீடங்கள் பற்றியும்> முகம் கொடுப்பதா முதுகு காட்டுவதா என்ற வினாக்களோடு மனிதர்களின் இரக்கமின்மையினையும் புறக்கணிப்பையும், தருணம் பார்த்துக் கழுத்தறுக்கும் நிலையினையும் பல கவிதைகளில் தோலுரித்துக் காட்டுகின்றார்.

அதனாற்தான் இயற்கை கூட ஈரமும் மழையும் கண்டாலே துளிர்விட நினைக்கின்ற கணங்களிலே இந்த மனித மனங்கள் மட்டும் ஏன் இவ்வாறு இருக்கின்றன என்று கேட்கிறார்.

“ஈரமும் மண்ணும் கண்டாலே

வெட்டுத் துண்டமாய்க் கிடக்கும்

பூஞ்செடியின் சிறுகம்பு

வேர்விட நாள் பார்க்கிறது

அறிவு சுமந்த எமது

மனித இதயங்கள் மட்டும்

ஏன் இப்படி?”

(ஏன்)

மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் முடிவிலியாய்த் தொடர்கின்ற தொடரிசை போல் பல கவிதைகளில் தொடர்வதைக் கண்டு கொள்ளலாம். அவற்றுள் முக்கியமானது: பல அர்த்தத் தளத்தில் பயணிப்பது. விடுதலையாகி, அர்த்தம், ஒரு புழுக்கூட்டின் கதை, நெடியோடு வீசும் காற்று ஆகிய கவிதைகளை ஆதாரமாகக் காட்டலாம்.

‘இருள்’ ஒரு படிமமாகவே பல கவிதைகளில் தொடர்வதைக் காணலாம். இருள்: கவிதைகளின் பாடுபொருளாக அமைகின்ற அதேவேளையில் மக்களைத் தொடர்ச்சியாக வாட்டும் அவலத்திற்கும் அதிகாரத்திற்கும் குறியீடாகவும் வருகின்றது.

“கோரப்பற்கள் துருத்திய வாயொடு

குதித்தாடத் தொடங்கியது இருள்”

(கூத்து)

இருள் எல்லோரையும் பயம்கொள்ள வைக்கிறது. பகல் குறுகி விடுகிறது. இருளும் பேய்க்காற்றும் கைகோர்த்துத் தம் ஊழிக் கூத்தை நிறைவு செய்து வெளியேறுகின்றன. அடுத்தநாள் காலைப்பொழுது மிக அமைதியாக விடிகின்றது.

“நோயொடு புலர்ந்த காலையில்

தெருக்களும் நிலங்களும்

கழுவப்பட்டிருந்தன

சுவர்கள் புது வர்ணம் தீட்டப்பட்டிருந்தன

குளித்துப் புத்தாடை அணிந்து

போய்க் கொண்டிருந்தோரின்

கவனத்திற்குத் தப்பிய கால்விரல்

இறைகளுக்குள்

உலர்ந்து போயிருந்தது

இரத்தம்”

(கூத்து)

ஒரு வழிப்போக்கன்போல் காற்று யாரையும் கேட்காமல் யன்னல் கதவுகளை அடித்துச் சாத்திவிட்டுப் போகிறது. நீண்ட பகல் ஒரு குட்டிநாய் போல் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஒதுங்கிக் கொள்கின்றது. இவையெல்லாம் சத்தியபாலனின் கவிதைகளை முழுமையாகத் தரிசிக்கும்போது எமக்குள் வந்து சேரும் நுண்ணிய அனுபவங்கள்.

‘அர்த்தம்’ என்ற கவிதை அதிகாரத்தை இயல்பாகவே பேசும். இங்கு மொழியின் செதுக்கலை மிகக் கூர்மையாக அவதானிக்கலாம்.

“சென்ற திசையிலேயே

திகைத்தலைந்தன சில

வில்லங்கமாய்ப் பிடித்து

அமர்த்தப்பட்டன சில

தவறான இடத்தில்

அவமதிக்கப்பட்டு

முகஞ்சிவந்து திரும்பின சில

உரிய திசையின்

இடமோ

வெறுமையாய் எஞ்ச

எனது சொற்களின் கதி

இப்படியாயிற்று

நூற்றியோராவது தடவையும்”

(அர்த்தம்)

இந்த இறுக்கத்திற்கும் மத்தியில் சில கணங்கள் என்றாலும் கவிஞனால் உயிர்ப்பாய் இருக்க முடிகிறதென்றால் அது உறவுகளின் வாழ்விலேயே என்பார்.

வெளியே செல்லும் வழியில் நடைபெறும் சம்பவத்திற்குப் பின்னர் மிக வேகமாக வீடு வந்து சேரும் கவிமனத்தை இக்கவிதையில் காணலாம். வேலி, மதில், சுவர், கதவு இவற்றையெல்லாம் ஒரு காவலென எண்ணி வீட்டை நோக்கி விரைகின்றன கால்கள். கவிமனம் தன் வீடு தனக்கு பாதுகாப்புத் தருமென எண்ணுகிறது. இது ஒரு குருட்டு நம்பிக்கைதான். தன் மனத்தைத் தானே தேற்ற நினைப்பது போன்றது. காற்றும் இருளும் கால்முளைத்து நடந்து வந்து கதவு யன்னல்களை வேகவேகமாக மூடிவிட்டுப் போக இருளில் முக்காடு போட்டு மூடிக்கொண்டிருக்கும் குருட்டு மனம் வீட்டை எப்படிக் காவலென எண்ண முடியும்? இவையெல்லாம் சத்தியபாலன் கவிதைகளின் மெளனங்களுக்கான விடைகளாக இருக்க முடியும்.

மனிதனின் அகமும் புறமும் இணைந்து அடங்கிய வாழ்வினைக் கவிதைகள் பேசுகின்றன. தன்னுணர்வு சார்ந்த கவிதைகள் அதிகமெனினும் அவை கவித்துவத்தில் குறைவானவையெனக் கூறமுடியாது. சத்தியபாலன் அகத்தைப் பாடினாலும் அவர் அதற்குத் தேர்ந்து கொள்ளும் மொழியில் கூடிய கவனம் செலுத்தியிருக்கின்றார்.

தட்டையானதும் வெளிப்படையானதும் நீர்த்துப் போனதுமான சொற்களுடன் கூடியவையே கவிதைகள் என்ற தவறான கருத்து; சத்தியபாலன் போன்றோரின் கவிதைகள் புரியவில்லை என்ற ஆபத்தையும் விதைத்து விட்டுச் செல்லலாம். அதற்குப் படைப்பாளியைக் குற்றம் சுமத்த முடியாது.

இங்கு சத்தியபாலன் தனக்குரிய மொழியைக் கட்டியிருக்கிறார். கவிதை அதற்கேற்ற வடிவத்தினைப் பெற்றிருக்கிறது. உணர்வுக்கூடாகவே கவிதைகள் தமக்குரிய வெளியைத் தேடுகின்றன. மண்ணிலிருந்து கிளம்பி பிரபஞ்ச வெளியைத் தேடியபடியிருக்கின்றன. கண்ணாடி முன்னால் நொறுங்கிப் போன விம்பமாய், கழிந்து போன காலங்களை ஈடுசெய்வதற்கு முனையும் எத்தனங்களாய் கவிஞனின் மனம் அந்த வெளிகளில் சஞ்சாpக்கிறது.

நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும், இரண்டு பேர், மூன்று பொம்மைகள், அர்த்தம், கூத்து, காவல், கனவு, ஏன் இதுபோன்ற பல கவிதைகளைக் கவித்துவமும் உணர்வும் பொதிந்த வரிகளுக்கு உதாரணமாகக் காட்டலாம்.

பொய்யும் போலித்தனமும் துதிபாடும் மரபும் மிக மலிந்து போயுள்ள தற்கால ஈழத்து இலக்கியச் சூழலில்; எமது காலங்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்து கொள்வதற்குரிய ஒரு எத்தனமாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளமை வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ்க் கவிதைகளின் வெளியை நோக்கி சத்தியபாலனின் கவிதைகளும் பயணிக்கும் என்று கருதலாம்.

நன்றி:- ஜீவநதி, இதழ் 13, ஆடி - ஆவணி 2009

Tuesday, May 5, 2009

தாட்சாயணியின் சிறுகதைகளில் பெண் சித்திரிப்பு









ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்ட ஓர் ஆரம்ப வாசிப்பு

----------சு. குணேஸ்வரன்

தாட்சாயணி 90 களில் இருந்து எழுதி வருகின்றார். இவரின் ஒரு மரணமும் சில மனிதர்களும், இளவேனில் மீண்டும் வரும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை ஆதாரமாகக் கொண்டு பெண் பற்றிய சித்திரிப்பினை இக்கட்டுரை நோக்க முயல்கின்றது.

இரண்டு தொகுப்புகளிலும் 24 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. எனினும் நுண்மையாக நோக்கும் பொருட்டு பெண் பற்றிய கதைகள் மாத்திரம் இங்கு கருத்திற் கொள்ளப்படுகின்றன.

தாட்சாயணியின் கதைகளானது 90 களின் பின்னர் மக்கள் எதிர்கொண்ட போர்க்கால வாழ்வின் நெருக்கடிகளைப் பதிவு செய்கின்றன. போரின் ஊடான மக்களின் வாழ்வு அவர்களுக்கு உடல் உளரீதியாக எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதனை இவரின் அதிகமான சிறுகதைகள் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. இதற்கூடாகவே பெண் என்ற நிலையில்; இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் தாட்சாயணி மிக நுண்மையாகப் பதிவு செய்துள்ளார்.

ஒரு மரணமும் சில மனிதர்களும் தொகுப்பிலுள்ள ‘சோதனைகள்> மழை> பெண்> தீ விளிம்பு’ ஆகிய நான்கு கதைகளும் இளவேனில் மீண்டும் வரும் தொகுப்பிலுள்ள ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> அவளும் இவளும்> சலனம்> கண்ணீர்ப்பூக்கள்> மழையில் உதிர்ந்த மலர்> அவள் கண்ணகி இல்லை> இளவேனில் மீண்டும் வரும்’ ஆகிய எட்டுக் கதைகளும் இக்கட்டுரைக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பெண்களை தனது கதைகளின் பாத்திரங்களாக தாட்சாயணி நிறுத்துகின்றார். பத்து வயதுச் சிறுமி முதல் பாட்டி வரை பெண்கள் என்ற நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பல நெருக்கடிகளைப் பேசும் பாத்திரங்களாக அவர்கள் உலாவருகின்றனர்.

தாட்சாயணி தன் கதைகளில் முன்நிறுத்தும் பெண்களின் ஒடுக்கு முறையாளர்களாக மூன்று பிரிவினரை இனங்காண முடிகின்றது.

1. குடும்பம் மற்றும் சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள்

2. அதிகாரமும் ஆதிக்க வலுவுமுள்ள ஆண்கள்

3. சமூகத்தின் பல படிநிலைகளில் உள்ள ஆண்கள் தவிர்ந்த ஏனையவர்கள்

இங்கு முதலாவதாகக் குறிப்பிட்ட ஆண்களில் விடலைப் பையன்> பல்கலைக்கழக மாணவர்கள்> வாலிபன்> தகப்பன் நிலையில் உள்ளோர்> அலுவலக வேலை செய்யும் ஆண்கள்> காதலனாக உருவெடுக்கும் ஆண்கள்> மற்றும் முதிய நிலையில் உள்ள ஆண்கள் (அவள் கண்ணகி இல்லை என்ற சிறுகதையில் கலியாணப் புறோக்கராக வருபவரும் ஆணாதிக்கப் பிரதிநிதியாகவே சித்தாpக்கப்படுகி;றார்) ஆகியோரைக் குறிப்பிடலாம்.


இரண்டாவது நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரமும் ஆதிக்க வலுவும் உள்ள ஆண்களைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு முதல் உதாரணமாக வரக்கூடியவர்கள் ஆயுதம் தாங்கிய அதிகார வலுவுள்ளவர்கள்> மற்றும் குடும்பத்தில் அதிகார வலுவுள்ள ஆண்கள்> பணம் படைத்தோர் (மழையில் உதிர்ந்த மலர் கதையில் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தும் கடைக்காரன் பணக்காரனாகச் சித்தாpக்கப்படல்)

மூன்றாவது நிலையில் உள்ளவர்களுக்கு எமது சமூக அமைப்பிலுள்ள ஆண்கள் தவிர்ந்த மற்றெல்லோரையும் குறிப்பிடலாம். இவர்களில் அம்மா ஸ்தானத்திலுள்ள பெண்கள்> மாமிமார்கள்> சகோதாpகள்> முக்கியமானவர்கள்.

தாட்சாயணி முன்நிறுத்தும் பெண்கள் எவ்வாறானவர்கள் என்று நோக்கும்போது பெண்ணின் பல நிலையில் உள்ளவர்களும் இவரது கதைகளில் சிக்கலை எதிர்கொள்பவர்களாக வருகின்றனர்.

1. ஸ்கொலசிப் எடுக்கவிருக்கும் பத்து வயதுச் சிறுமி (மழையில் உதிர்ந்த மலர்)

2. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> அந்தப் பத்து நிமிடங்கள்> தீ விளிம்பு)

3. தொழில் புரியும் இளம் பெண்கள் (அவளும் இவளும்> கண்ணீர்ப்பூக்கள்> சலனம்> பிஞ்சுமனம்)

4. காதலித்;து ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் (ஒரு புல்லாங்குழல் ஊமையானது> சலனம்> இளவேனில் மீண்டும் வரும்)

5. திருமண வாழ்வில் உள்ள குடும்பப் பெண் (அவளும் இவளும்)

6. கணவனை இழந்த பெண்கள் (கண்ணீர்ப் பூக்கள்> வெளியில் வாழ்தல்)

7. வயது முதிர்ந்த தாய் (மழை)

இந்தப் பெண்களின் பிரச்சனைகளைப் பின்வரும் வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.

காதலித்து ஏமாற்றப்பட்ட பெண்கள்> காதலித்து விட்டுச் சீதனத்தைக் காரணமாகக் காட்டி வேறு பெண்ணைத் திருமணம் செய்யும் ஆண்களால் கைவிடப்பட்ட பெண்கள்> பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு மனம் பேதலித்த பெண்> ஆணால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி> ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்கள்> குடும்ப வாழ்வில் கணவனை இழந்த பெண்> குடும்ப வாழ்வில் கணவனைத் தொலைத்து விட்டுச் சமூகத்தின் வசைக்கு ஆளான பெண்> பிரச்சனையால் கணவனை இழந்த (காணாமற்போன) பெண்> விரும்பியவனை மணம் முடித்தும் கூட ஆணின் வசைக்கு ஆட்படும் பெண்> என்றவாறு இக்கதைகளில் வரும் பெண்களின் பிரச்சனைகளை வகுத்துக் கொள்ள முடியும்.

வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் பற்றிய கதைகளில் ‘மழையில் உதிர்ந்த மலர்;’ ‘மழை’ ஆகிய இரண்டு கதைகளை எடுத்துக் காட்டலாம்.

மழையில் உதிர்ந்த மலர் என்ற சிறுகதையில் குடிகாரத் தகப்பனையும் நான்கு சகோதரிகளையும் நோய்வாய்ப்பட்ட தாயையையும் கொண்ட குடும்பத்திலிருந்து பத்து வயதுச் சிறுமியின் பாத்திரத்தை தாட்சாயணி எம்முன் நிறுத்துகிறார்.

தகப்பன் எந்தச் சிந்தனையும் இல்லாது குடித்துவிட்டுத் தாயை அடித்து உதைத்து வரும் குடும்பத்தில் இந்தச் சிறுமி குடும்ப பாரத்தைச் சுமக்கின்றாள். ஒருமுறை தாய்க்கு ஏற்பட்ட உடற்சுகயீனம் காரணமாக 5 ரூபா காசுடன் பனடோல் வாங்குவதற்கு மழையில் நனைந்து கொண்டு கடைக்குச் செல்லும் சிறுமி சந்தர்ப்பவசத்தால் அந்தக் கடைக்காரனால் ஏமாற்றப்பட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றாள். மயக்கம் தெளிந்த சிறுமிக்கு தனக்கு ஏதோ நடந்து விட்டது தெரிகின்றது.

இரண்டும் கெட்டான் வயதில் ஒன்றும் புரியாமல் தன்னிடம் எதையோ இழந்துவிட்ட அந்தச் சிறுமியை அவள் அலங்கோலமாய்க் கட்டிலில் கிடக்கும் கோலத்தை அவன் சிகரட் குடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

சுpகரட் மணம் அவள் நாசியை நன்றாகவே தாக்கிற்று தடிமனாயிருந்த போதும் கூட கைகள் தன்பாட்டில் உரசிக் கொள்ளக் கையில் இறுக்கிக் கொண்டிருந்த ஐந்து ரூபாய் குற்றி கீழே விழுந்தது அந்தச் சத்தத்தில் திடீரென்று உருவப்பட்ட அவள் சட்டென்று நிமிர்ந்தாள். அவன் பார்வைக்குள் விழுந்தாள். ஒன்றும் பேசாமல் எழுந்தாள் நடந்ததெல்லாம் ஏதோ தப்பான விஷயங்கள் தானென்று விளங்கின.

து}ரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார் வெறியில் தள்ளாடும் நடை ‘இந்த அப்பா செத்துப் போனால் தான் என்ன?’ குரூரமான ஒரு ஆசை.. ……இன்னும் எத்தனை புயல்களுக்கிடையில் அவள் பூவாய் உதிர்வாளோ?

இந்தக் கதையைப் போல் சமகாலத்தில் எழுதி வரும் நிருபா> சுமதி ரூபன் ஆகியோரின் சிறுகதைகளையும் இதற்கு இணையாகக் காட்ட முடியும்.

இதேபோல் ஆதிக்கக்கரங்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு மனம் பேதலித்த நிலையில் உள்ள பெண்ணை ‘மழை’ என்ற இன்னொரு சிறுகதையில் ஆசிரியர் சித்திரிக்கிறார்.

‘மழை’ அடிப்படையில் ஒரு குறியீட்டுக் கதை. செம்மையான மொழிநடை இக்கதைக்கு வலுவாக உள்ளது. ஒரு பெண் ஆதிக்கக் கரங்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சாகும் நிலையில் விட்டுச் செல்லப்படுகின்றாள். வயது முதிர்ந்த பேத்தியின் பாதுகாப்புடன் உயிர்மீள்கிறாள். காலஓட்டத்தில் மனம் பேதலித்த நிலையில் அவள் பஸ் ஸ்ராண்டுகளில் அலைவதாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

…பலாமரங்களுக்கிடையே அவளை விழுத்தி சதிராடிற்று மழை. பெரிய பெரிய கரும்பூத மேகங்கள் திரள்களாக மோதி அவளை மிதித்துச் சிதைத்தன. இவள் கைகளைக் கட்டிற்று மழை…இவள் குரல்வளை இறுக்கிற்று மழை… இவள் மானம் பறித்துச் கெக்கலித்தது மழை..

‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ அடிநெஞ்சிலிருந்து அழுகை தெறிக்கும் குரலில் ஒரு பதைபதைப்பு.

இங்கு மழை கதையில் வரும் ‘எடியேய்> என்ரை செல்லம் எங்கையடி போட்டாய்..’ என்ற ஆச்சியின் இந்த உருக்கமாக குரல் படிப்போரை மனம் நெகிழச் செய்யும்.

உண்மையில் இந்தக் கதையைப் படிப்பவர்களுக்கு தாட்சாயணி காட்டியதுபோல் எத்தனையோ பெண்களை உதாரணம் காட்டக்கூடியதாக இருக்கும். இதற்கெல்லாம் காரணமாக> நாங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட காலங்கள் குற்றவாளியாக எங்கள் முன் நிற்பதனை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.

இந்தக் காலங்கள் பெண்களைப் பைத்தியமாக்கி விட்டிருக்கின்றன. ஆதிக்கக் கரங்களின் கைகள் எங்கெங்கு பெண்களின் மேல் விழுகின்றதோ அங்கெல்லாம் பெண் எதிர்க்க முடியாமல் பைத்தியமாகின்றாள். இதேபோல் ஒரு புல்லாங்குழல் ஊமையானது என்ற மற்றும் ஒரு சிறுகதையிலும் மனம் பேதலித்து வெறும் ஜடமாகத் திரியும் பெண்ணை தாட்சாயணி சித்திரிக்கிறார்.

ஒரு மரணமும் சில மனிதர்களும் என்ற தொகுப்பிலேயே வித்தியாசமான கதை சொல்லும் அனுபவமாக நான் ‘மழை’ யைக் கருதுகிறேன். மழை என்ற குறியீடு கதையின் தொடக்கம் முதல் முடிவு வரை வளர்த்துச் செல்லப்பட்டதா என்பது இக்கதையைப் பொறுத்தவரையில் ஒரு மயக்கம் உள்ளது. மற்றும்படி தாட்சாயணி தன் கதைசொல்லும் நடையில் மேலுமொரு உத்தியை இங்கு முயன்று பார்த்துள்ளார் என்றே கூறல் வேண்டும். இந்த முறை நல்லபடியாக எதிர்காலத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நவீன கதை சொல்லல் உத்தியில் கவிதை போலவே மொழியைக் கையாண்டிருக்கிறார். இக்கதையின் பலமாகக்கூட மொழியே மேலோங்கி நிற்கிறது.

கதைக்கருவைப் பொறுத்தவரை மழை என்ற கதைக்கு மிக அருகில் வரக்கூடிய இன்னொரு கதையே ‘தீ விளிம்பு’ ஆகும். இங்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி வீட்டுக்குத் திரும்புகிறாள் இடையில் காணாமற்போகிறாள்.

சமூகத்தின் வசைக்கு ஆளாகி மனம் பேதலித்த பெண்ணையும் அந்தச் சுவடுகளோடு உலாவரும் பெண்களையும் இவரின் கதைகளின் இன்னொரு அம்சமாகச் சுட்ட முடியும். ‘ஒரு புல்லாங்குழல் ஊமையானது’ என்ற கதையானது பலவிதமான கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் ராதா என்ற பெண்ணைச் சித்திரிக்கிறது.

இயல்பிலேயே அமைதியும் பயந்த சுபாவமும் உள்ள ராதா மருத்துவத்துறைக்குத் தெரிவாகிப் பல்கலைக்கழகம் நுழைகின்றாள் அங்கு சில மாணவர்களால் பகிடிவதைக்கு ஆளாகி பலவித மன உழைச்சல்களை எதிர்கொள்கிறாள். ராதா சிறுமியாக இருக்கும்போது தாய் இறந்துவிட தகப்பன் இரண்டாந் தாரமாக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ராதா தன் ஊரிலேயே கண்ணன் என்ற முறை மச்சானைக் காதலித்த நிலையில் பல்கலைக்கழகம் செல்கிறாள். இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படியோ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்குக் கிடைத்துவிட இவற்றைச் சாட்டாக வைத்து பலவித கதைகளை இம்மாணவர்கள் இவளிடம் பகிடிவதைக் காலத்தில் மனம் நோகுமாறு கேட்பது இவளைப் பாதிக்கின்றது.

‘அப்பனுக்கேத்த மகள்தானை> அப்பன் ரெண்டாவதா ஒண்டைக் கட்டிப்போட்டான். மகள் இன்னும் எத்தனை பேரை..’

‘அதுசரி அப்பன் தான் போய் பொம்பிளை பாத்தவனோ…இல்லாட்டி நீயும் கூடப்போய்ப் பார்த்து நீதான் செய்து வைச்சனியோ?’

இதேபோல் மேலும் பல தாக்கங்களினூடாக இவற்றை நினைத்து நினைத்து மனம் பேதலித்துப் போகிறாள். இறுதியில் கண்ணனின் தாய் தன் மகனை லண்டனில் வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். ராதா அப்படியே ஜடமாக உலாவருகிறாள்.

இச்சிறுகதையில் ராதா மீதான பல்கலைக்கழக மாணவர்களின் கேலிப்பேச்சு> இவள் பற்றிய சமூகத்தின் பார்வை> இவளைக் காதலித்தவன் ஏற்றுக்கொள்ளாத ஏமாற்றம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டு விடுகின்றமையை காணமுடியும். இவையெல்லாம் சமகால மனித மனங்களின் நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

‘சோதனைகள்’ என்ற கதை ஒரு பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத அசெளகரியங்களைக் கூறுகின்றது. சோதனைச் சாவடியில் பெண் அனுபவிக்கின்ற சொல்லமுடியாத துன்பங்கள் என்று தான் கூறவேண்டும். ஒருபுறம் ஆண்களால் படுகின்ற வேதனைகள் போதாதென்று மறுபுறம் அம்பலத்தில் நின்று கொண்டு எதிர்த்துப் பேசமுடியாமல் எதுவும் கூறமுடியாத நிலை என்று வருகின்றபோது அந்தப்பெண் செத்துவிடலாம் என்று கூட நினைக்கிறாள்.

‘அவள் கண்ணகி இல்லை’ என்ற கதை வெளிநாட்டு மாப்பிள்ளையை மணம் முடித்துச் செல்லும் பெண்ணின் நிலைபற்றிக் கூறுகின்றது. பெண்பிள்ளை என்றாலே எங்காவது கட்டிக் கொடுத்துவிட்டால் தங்கள் சுமை குறைந்து விடும் என்று எண்ணும் பெற்றோர் மத்தியிலிருந்து வருகின்ற இக்கதையில், செவ்வந்தி A/L எடுத்தவுடன் லண்டன் மாப்பிளைக்குக் கலியாணம் செய்து கொடுக்கப்படுகி;றாள். மாப்பிள்ளை வந்து தடல்புடலாக கலியாணம் செய்து கூட்டிப் போகின்றான்.

இவளுக்கு இப்போ அவன்தான் உலகம். அவன்தான் தெரிந்த ஒருவன் என்றாகிவிடுகிறது. லண்டனுக்குச் சென்றதும் அவனுக்கு ஒரு வெள்ளைக்கார மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உடனேயே செவ்வந்திக்குத் தெரியவருகிறது. அங்கு செவ்வந்தியை வெள்ளைக்கார மனைவிக்குத் தமது வேலைக்காரி என்று அவன் கூறிவைக்கின்றான்.

She is sevvanthy, our servent. Cylon girl. உடை மாற்றிவிட்டு வந்தவன் அவளுடைய இறுகிய மெளனம் கண்களைக் குத்த வேறுபுறம் பார்த்தபடி சொன்னான். ‘I am sorry sevvanthy ’ அம்மா அப்பாவைக்கு நான் ஜென்னியைச் செய்தது தெரியாது. அவையளுக்காகத்தான் உம்மைச் செய்தனான்…’

என்று இவளைக் கல்யாணம் செய்ததற்குக் ஒரு குருட்டுக் காரணம் கற்பிக்கின்றான். இந்நிலை எமது சமூகத்தில் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பல திருமணங்கள் இவ்வாறு நடைபெற்றும் உள்ளன. இதனைத் தாட்சாயணி தன் கதைகளுக்குக் கருவாகக் கொள்வதிலிருந்து எமது சமூகத்தில் பெண்கள் என்றாலே சுமையாகக் கருதுகின்ற மாயையில் என்ன நடந்தாலும் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு விடுவதனை உணரக் கூடியதாக உள்ளது. இதுவே எமது சமூகத்தின் துயரமாகிப் போனமையும் ஏற்றுக் கொள்ளமுடியாத உண்மையாகும்.

இந்தக் கதையுடன் இணைத்து வேறும் சில கதைகளைக் கருத்திற் கொள்ள முடியும். அவற்றை காதல்> திருமணம்> மற்றும் ஏமாற்றமான குடும்ப வாழ்வு சார்ந்தன என்ற பகுப்பினுள் அடக்க முடியும்.

‘சலனம்’ என்ற சிறுகதையில் வரும் பாலினி சித்திரன் என்ற வாலிபனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பின்னர் திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் தன் தங்கைமாருக்காக வாழும் நிலையை தாட்சாயணி எடுத்துக் காட்டுகின்றார். சித்திரன் பெற்றோருக்குக் கட்டுப்பட்டு பாலினிக்கு எதுவும் சொல்லாமற் கொள்ளாமல் வெளிநாடு சென்று விடுகின்றான்.

பெண்கள் என்றாலே ஆண்களை வளைத்துப் போடுபவர்கள் என்ற எதிர்பார்ப்பு சமூகச்சார்ந்த ஒரு கருத்தாக இருப்பதனை அவனின் பெற்றோர் மூலம் அறிகின்றாள். தான் விரும்பிய வாழ்வு தனக்குக் கிடைக்கவில்லை. இனியென்ன என்ற எண்ணத்துடன் வாழ்கிறாள்.

‘அவளும் இவளும்’ என்ற சிறுகதையில் சித்திரா நீலவேணி என்ற இரண்டு பெண்கள் வருகின்றனர். சித்ரா தன்னில் காதல் கொண்டவனின் காதலைத் (சாதிப்பிரச்சனை காரணமாக) தன் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்காக விருப்பம் இருந்தும் நிராகரிக்கின்றாள். ஆசிரியத் தொழில் கிடைத்தது. வேறு திருமணம் பற்றியே சிந்திக்க அவளுக்கு மனம் இடங்கொடுக்காததால் அப்படியே வாழ முடிவு செய்கிறாள்.

அதேநேரம் சித்திராவின் தோழியாகிய நீலவேணி பெற்றோருக்குக் கட்டுப்படாமல் தான் விரும்பியவனுடன் ஓடிவந்து திருமணம் செய்கிறாள். கால ஓட்டத்தில் நீலவேணியின் பெற்றோர் வந்து போனாலும் பெரிய ஒட்டுறவைக் காட்டிக்கொள்ளவில்லை. இக்கதையில் எல்லோரையும் உதறிவிட்டுத் தன் இஷ்டம் போல் வந்தபடியால் சமூகத்திற்கு வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஓர்மம் நீலவேணியிடம் இருக்கின்;றது. ஆனால் குடும்பத்தில் சந்தோசமற்ற வாழ்வே அவளுக்குக் கிடைக்கிறது. இதனை சித்ராவுக்குக்கூட சொல்லாமல் வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறுகிறாள்.

இந்த இரண்டு பெண்களின் உணர்வுகளையும் தாட்சாயணி எதிரும் புதிருமாக இக்கதையில் எடுத்துக் காட்டுகிறார்.

‘இளவேனில் மீண்டும் வரும்’ என்ற சிறுகதையில் வெண்ணிலா என்ற பெண்@ சங்கர் என்பவனைக் காதலிக்கின்றாள். திருமணம் என்று வரும்போது சங்கர் தன் பெற்றோர் தன்னைப் படிப்பித்த செலவு மற்றும் சீதனம் வேண்டும் என்ற காரணங்களைக் காட்டி வெண்ணிலாவை ஏமாற்றிவிட்டுப் பெற்றோர் பார்த்து வைத்த வேறு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கிறான்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய நரேந்திரன் என்பவன் (இவன் சங்கரின் நண்பன்) இவற்றை அறிகிறான். வெண்ணிலா ‘தன்னுடைய காதல் உண்மைக்காதல் எப்படி நான் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முடியும்’ என்ற மனப்போராட்டத்துடன் வாழ்கிறாள். ஆனால் நரேந்திரனின் கருத்துக்கள் வெண்ணிலாவைப் புரிந்து கொண்ட தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் வெண்ணிலா நரேந்திரனைத் திருமணம் செய்யச் சம்மதம் தெரிவிக்கிறாள்.

இவ்வாறாக> அவள் கண்ணகி இல்லை> சலனம்> அவளும் இவளும்> இளவேனில் மீண்டும் வரும் ஆகிய நான்கு கதைகளையும் திருமணம்> மற்றும் காதல் சார்ந்த வகைப்பாட்டுக்குள் அடக்க முடியும்.

தாட்சாயணியின் இந்தக் கதைகளின் பலமாக நான் கருதுவது சமகால ஈழத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் யதார்த்தமாகப் பதிவு பெறுவதைத்தான். இந்நிலை, கதைகள் பற்றிய நம்பகத் தன்மையை சாதாரண வாசிப்புள்ள வாசகர் மட்டத்திற்கும் எடுத்துச் செல்கின்றது. இது மிக முக்கியமானது.

கதை சொல்லலில் இலாவகமான ஒரு நடையை தாட்சாயணி கையாள்கிறார். கதைகள் வாசகரை கதையோடு ஒன்றச் செய்கின்றன. கதையைப் படிக்கும் போது இது நாம் கேள்விப் பட்ட கதையாக இருக்கிறதே என நினைத்து கதிரையின் விளிம்பில் இருந்து படித்து விட முடிகிறது. அதனுள்ளும் கதை நகர்வில் காட்டுகின்ற ஆர்வம் அதிகமும் பாத்திர உரையாடலுக்கு ஊடாகவே வெளிப்படுகின்றது. தாட்சாயணியின் கதைகளில் ஒப்பீட்டளவில் இது அதிகம். (இதில் வேறுபட்ட கருத்தும் உள்ளது) அவ்வாறு வெளிப்படும் போது கதையோட்டத்துடன் மிக நெருக்கமாக வர முடிவதும் இந்தக் கதைகளின் சிறப்பு எனலாம்.

அடுத்து பெண்கள் பற்றிய இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது என்பதனை பல கதைகளில் வெளிப்படுத்தி விடுகின்றார். இடப்பெயர்வின் காரணமாக கணவன் வன்னியில் குண்டடிபட்டுத் தனித்துப் போக அவனைத் தேடித் தனது உறவினர் ஒருவருடன் செல்லும் பெண்ணை (வெளியில் வாழ்தல்) அவனுடன் ஓடிப்போய்விட்டதாக கதைகட்டி அவளின் குழந்தையின் காதில் விழும்படி கதைக்கும் சனங்கள் பற்றிய சித்திரிப்பு இவற்றுக்கு இன்னோர் எடுத்துக்காட்டாகும். இதேபோல் பெண் பற்றிய கதைகள் மட்டுமல்லாமல் இவரின் வேறு கதைகளிலும் இந்தப் பண்பினைக் காணமுடியும்.

இந்தக் கதைகளில் எல்லாம் பெண்களின் மீது தமது அதிகாரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகிப்பவர்களாகவே ஆண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். அதே நேரம் பெண் அந்த அடக்குமுறையினுள் இருந்து வெளியே வரமுடியாதவளாக> அதிகமும் மற்றவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்பவளாக இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றார்.

ஆனால் எல்லா நிலைகளிலும் பெண் அவ்வாறு அடங்கி;ப் போகின்றவளாக இல்லாமல் தன்னைப் பற்றிச் சிந்திப்பவளாகவும் இருக்கின்றாள். திருமணம்தான் என் வாழ்வைச் சமப்படுத்துமானால் எனக்குத் திருமணமே தேவையில்லை என வாழ்கின்ற பெண்ணை

‘உன் வரைக்கும் ஒரு கல்யாணம் என் உள்ளத்தை சமப்படுத்தி விடும் என்று யோசிக்கிறாயோ?’

என்று கேட்பதாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். அதே நேரம் சூழலைப் புரிந்து கொண்டு மிகப் புத்திசாலித்தனமாகச் செயற்படும் பெண்களையும் நிலைநிறுத்துகின்றார். அவள் கண்ணகி இல்லை என்ற கதையில் வரும் பெண் பாத்;திரம் அற்புதமான சித்திரிப்பு.

இவ்வாறாக தாட்சாயணி பெண் சார்ந்த கதைகளில் பெண்கள் இந்தச் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற அடக்குமுறைகளையும் துயரங்களையும் யதார்த்தமாகச் சித்திரிக்கின்றார். இவற்றை ஒரு பெண் படைப்பாளியாலேயே பதிவு செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதைகள் ஆதாரமாகத் திகழ்கின்றன.

90 களின் பின்னரான ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான ஒரு பெண் படைப்பாளியை அடையாளங் காட்டுவனவாகவே இந்த இரண்டு தொகுப்புகளும் அமைந்துள்ளன. புதிய களங்களையும் புதிய கதைகளையும் புதிய உத்திகளையும் நோக்கி தாட்சாயணி தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். அப்போது வடிவச் செழுமையும் பெண்களின் உணர்வுநிலைகளை மேலும் ஆழமாகப் பதிவுசெய்யும் பெண்மொழியுடன் கூடிய கதைகளும் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்படும். அந்த எல்லைகளை நோக்கி தாட்சாயணி நகரும் போது எங்கள் தமிழ் அனுபவங்கள் உலகப் படைப்புகளுக்குச் சென்று சேரும் ஒரு வாய்ப்பையும் வழங்கக்கூடும்.

நன்றி :- ஜீவநதி இரண்டாம் ஆண்டு நிறைவு மலர்> வைகாசி ஆனி 2009> பதிவுகள் இணைய இதழ்.

Monday, April 20, 2009

ஆயிஷா நூல் அறிமுகம்















-----------சு. குணேஸ்வரன்

ஆயிஷா என்ற குறுநாவல் அண்மையில் வெளிவந்துள்ளது. தமிழ் நாட்;டைச் சேர்ந்த இரா. நடராசன் எழுதி 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை அதன் தேவை கருதி அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாக கொண்டு வந்துள்ளனர்.

ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவுதான். என்றாலும்@ மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது.

எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.

இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இருந்து பாடசாலை> மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை மாணவர்களின் சொந்தக் கருத்துக்களையோ> தேடல்களையோ> வரையறுத்து தேய்ந்துபோன ஒலித்தட்டுப்போல் ஆசிரியர் கூறுவதையே மீண்டும் மீண்டும் கேட்கும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாணவர்களிடம் இருந்து சீரிய சிந்தனைகளோ>அல்லது ஆயிஷா கேட்பதுபோல்@

“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்? ”

என்று கேட்கத் து}ண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும்> அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.

ஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்!

நமது ஈழநாடு 25-10-2004

Saturday, March 28, 2009

புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு



சு.குணேஸ்வரன்..................................

புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென்படும். அந்த வகையிலே இக்கட்டுரையானது புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது.

1983 இன் பின்னர் இலங்கையில் உத்வேகம் பெற்ற இனவுணர்வுச் சூழல் பெருமளவான ஈழத் தமிழர்களை மேற்குலக நாடுகளை நோக்கிப் புலம்பெயர வைத்தது.

புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவங்களாகிய கவிதை சிறுகதை நாவல் ஆகியவற்றையே முதன்மையாக கருத்திற் கொள்கின்றோம். அவற்றின் உள்ளடக்க ரீதியான பண்புகளைச் சுட்டும்போது ஒரு பொதுமைக்குள் நின்றுகொண்டே இதுவரை விவாதித்திருக்கின்றோம்.

ஈழத்து இலக்கியத்தின் போக்கினை மதிப்பிடும்போது எவ்வாறு பிரதேச அலகுகளை மனங்கொண்டு எமது மதிப்பீட்டினை முன்வைக்கிறோமோ அதேபோல் புலம்பெயர் இலக்கியத்தின் பிரதேச வேறுபாடுகளை மனங்கொண்டு புலம்பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கும்போது சில தெளிவீனங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படும் என்று கருதலாம்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மூன்று கண்டங்களிலும் (அவுஸ்திரேலியா,அமெரிக்கா,ஐரோப்பா) உள்ள நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் சூழலியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவை குறிக்கும் உள்ளடக்கத்தை மிக நுண்மையாக வகைப்படுத்தவும் முடியும்.

அவுஸ்திரேலியா தனியாகவும்,அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடா, அமெரிக்கா தனித்தனியாகவும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் நோக்க முடியும்.

புலம்பெயர் படைப்புலகின் உள்ளடக்கத்தினை தாயகநினைவு, அகதிநிலை, தொழிற்தள அநுபவம், புதிய பண்பாட்டுச் சூழல், நிறவாதம், இனவாதம், புவியியற்சூழல், வித்தியாசமான வாழ்வுலகு, அந்நியமயப்பாடு, அனைத்துலக நோக்கு, என பொதுமைப் பண்பிற்கூடாகச் சுட்டினாலும் இவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்று கருத முடியாது. சில நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் சில பண்புகள் மிக அதிகமாகவும் மற்றைய நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் இப்பண்புகள் மிகக் குறைவாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

உதாரணமாக இனவாதம் நிறவாதம் சார்ந்த பிரச்சனைகளை ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. அதேபோல் பிரான்ஸ் ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் மொழிசார்ந்து தமிழர்கள் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கும் இலண்டன் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இதுபோல்தான் புவியியல் சார்ந்த இயற்கை அமைப்பிலும் வேறுபாடு உண்டு.

இவற்றை தனித்தனியான நுண்ஆய்வின் மூலமே கண்டு கொள்ள முடியும். இதற்கு அமைவாக இக்கட்டுரையானது ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு புலம்பெயர் படைப்புலகில் காணப்படுகின்றது என்பதனை ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக எடுத்துக் காட்ட முயல்கின்றது.

முதலில் கவிதைகளில் நோக்குவோம்.

“பலா இலை மடித்துக் கோலி

ஈர்க்கில் துண்டை முறித்துச் செருகி

ஓடியல் மீன் கூழை வார்த்து

அம்மா அப்பா தம்பி ஆச்சி என

சுற்றமும் சூழ இருந்து

உறிஞ்சிக் குடித்த நாட்கள்”

என்று தன் உறவுகளுடன் சொந்த மண்ணில் இருந்து மகிழ்வாக உண்டு களித்த நாட்களை நினைவுகளாக மீட்டுப் பார்க்கின்றார் கவிஞர் செழியன். இங்கு எமது மண்ணுக்கேயுரிய உணவுப் பழக்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது.

தாயகத்தை விட்டுப் பிரிந்து புவியியற் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ முற்படும்போது, சொந்தநாட்டு மண்மீதான நினைவும் ஏக்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும். பனிநிறைந்த வீதிகளும் வானளாவிய கட்டடங்களும் நிறைந்த தேசத்திலே இயந்திர வாழ்வுடன் போராடி மூச்சுத் திணறி வாழும் வாழ்க்கையிலே கவிஞா;கள் தமது தேசத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றார்கள்

தாயக மண்ணின் இயற்கை அழகும் அதனோடு இயைந்த வாழ்வும் நினைவுகளை மீட்கின்றன. கிடுகுவேலி. பனைவடலி, கிணறு, வயல், வீடு, முற்றம், கோவில், எல்லாமே நினைவுகளாகின்றன. இதனாலேயே கவிஞர் செல்வம் ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

“சிறுகுருவி வீடு கட்டும்

தென்னோலை பாட்டிசைக்கும்

சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை

புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.

அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்

செம்மண் பாதையோரம்

ஓர் தோட்டமும்

கனவுப் பணம் தேட

கடல் கடந்தோம்

நானும் நாங்களும்

அகதித் தரையில்

முகமிழந்தோம்.”

என்று கட்டிடக் காடாகிப் போன அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டு ஊரின் நினைவினை மீட்டுப் பார்க்கின்றார். தாயக மண்ணுடனான உறவில் இருந்து பிரிந்து ஆண்டுகள் பலவாகிய பின்னரும் காலவெள்ளம் எதையெல்லாம் புரட்டிப் பார்க்கின்றது என்பதனை பின்வரும் கவிதை வரிகள் ஊடாக நோக்கலாம்.


“வித்து வெடித்து முளைத்து விட்ட மண்ணிலிருந்து

பிடுங்கி எறியப்பட்டு

ஆண்டுகள் பத்தாயிற்று

நான் புரண்ட செம்பாடு

வியர்வையில் குழைத்து எழுப்பிய வீடு

மூலைக் கன்று மா

முற்றத்து மல்லிகை

எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம்

ஊர் சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை

சூரன் நாய்

காலவெள்ளம் எதையெல்லாம்

புரட்டிச் செல்கிறது.”

என்று ‘பனிவயல்; உழவு’ தொகுப்பின் முன்னுரையில் கவிதை வரிகளாகவே எழுதுகின்றார் திருமாவளவன்.


இவ்வாறாக ஈழத்து மண்ணின் வாழ்வும் வளமும் தாயக நினைவு சார்ந்த கவிதைகளிலே பிரதேசச் செல்வாக்குடன் பதிவுபெறுவதனை கண்டு கொள்ளலாம்.

இதேபோல் புனைகதைகளில் ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனையும் நோக்கமுடியும்.

அ. இரவியின் ‘காலம் ஆகி வந்;த கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பில் யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு சிறுவனின் உளநிலையில் கூறப்படும் கதையூடாக கதைக்குரிய காலத்தையும், எம் மண்ணுடன் இரண்டறக்கலந்த வாழ்வையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

பிள்ளைப் பருவ நினைவுகளுடாக (child hood) பாடசாலைப் பருவ வாழ்க்கை, கோயிற் சம்பவங்கள், ஊர் நினைவுகள் (இதனுள் கோயிற்பண்பாடு, சமூகத்தொடர்பு, மரபு, நம்பிக்கை, கலை என்பன ஊடுபாவாக கதைகளில் உள்ளடங்கியுள்ளன) என எல்லாவற்றையும் சம்பவங்களாக அடுக்கிச் செல்கிறார். ஈழத்துப் படைப்பிலக்கியத்திலே இவ்வாறான பிள்ளைப் பருவ நினைவினூடாக, பிரதேசச் செல்வாக்குடன் கதை கூறியவர்கள் மிகக் குறைவென்றே கூறலாம்.

இதேபோல் அ. முத்துலிங்கத்தின் பல சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மணங்கமழ சித்தாpக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கத்திடம் புறவுலகம் சார்ந்த சித்தாpப்பு மிக நுண்மையாக இருந்தபோதும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் இரத்தமும் சதையுமான வாழ்வனுபவம் மிகக் குறைவு என்றே கூறலாம். ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, சக்கரவர்த்தி, பொ. கருணாகரமூர்த்தி ஆகியோர் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் முத்துலிங்கம் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் இடையில் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன.

முத்துலிங்கத்திடம் காணக்கூடிய பல விசேட அம்சங்களில் ஒன்றாக ஈழத்து அடுக்கமைவுகளைத் தீண்டாத கதைகூறும் பாணி மிக முக்கியமானது. முத்துலிங்கத்தின் மனக்கிடங்கின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பல கதைகளில் யாழ்ப்பாணத்து வாழ்வினோடு ஒட்டிய பிரதேசச் செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும். ‘தில்லையம்பல பிள்ளையார் கோயில், அம்மாவின் பாவாடை’ ஆகிய கதைகளை இவற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

‘அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போட்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறு கை வெளியே தொங்க சின்னமாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன் போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

‘காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழிவிட்டனர். மூட்டை சுமப்பவர்களும்> பாதசாரிகளும் வேலிக்கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்ற பின்னும்> பார்த்தபடி நி;ன்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளி;ன் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்துபோல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

இன்னோர் புறமாக, முத்துலிங்கம் தன் உலகளாவிய பயண அநுபவத்தின் மூலம் தமிழுக்குத் தரும் புதிய கதைகள் கவனத்திற் கொள்ளத்தக்கவை. அவை அந்தந்த நாட்டுப் பிரதேச அனுபவங்களாக விரிகின்றன. பாகிஸ்தான் பிரதேச அநுபவத்திற்கூடாகக் கூறப்படும் ‘ஒட்டகம்’ கதை இதற்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் ஏனையநாட்டு அனுபவங்களினூடாகவும் வரும் பல கதைகள் இவரிடம் உள்ளன. இவையெல்லாம் தனித்த பார்வைக்குரியன.

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற விமல் குழந்தைவேலின் ‘அசதி’ தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் மட்டக்களப்பின் அக்கரைப்பற்று கோளாவூர் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பிரதேசச் செல்வாக்கினை நமக்குக் காட்டுகின்றன. இவரி;ன் அசதி தொகுப்பிலுள்ள ‘ஆச்சியும் பூசாரியும், சின்னாம்பி, அசதி, பேய் நாவை, வெள்ளாவி’ ஆகிய சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கலாம்.

விமல் குழந்தைவேலிடம் ஈழத்தின் கிராமியச் செல்வாக்குடன் கூடிய வாழ்வனுபவம் அவரின் படைப்புக்க@டாக வெளிப்படுதல் மிக முக்கியமானது. மரபுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், என்பவற்றுடன் அவர் கையாளும் வட்டார வழக்கு மொழிநடையும் முக்கியமானது.

இதேபோல்தான் இவரின் ‘வெள்ளாவி’ என்ற நாவலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்நாவலில் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் கிராமியச் செல்வாக்கு உள்ளமை கண்டுகொள்ளலாம். கோளாவில், அக்கரைப்பற்று. தீவுக்காலை, பனங்காடு ஆகிய சிறு சிறு கிராமங்களைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்து மக்களின் வாழ்வுடன் சலவைத்தொழிலாளர் சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வும், தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சுரண்டி வாழும் போடியார் சமூகம் பற்றிய பதிவும் இந்நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

இந்நாவலின் மொழிநடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக,

முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை பிரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க> ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக் கொண்டு பொண்டுகள் நடக்க மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண் ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகராமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண்ணூட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப்போகோணும் எண்டு சொல்லுவாங்க (வெள்ளாவி)

‘இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்போமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சி வரச் சொல்லுகா’ (வெள்ளாவி)

மேலே எடுத்துக் காட்டிய ஆசிரியரின் எடுத்துரைப்பு மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் விமல் குழந்தைவேலின் நாவலில் மிக அருகருகாக வருவதனைக் கண்டு கொள்ளலாம். இந்த வட்டாரத்தன்மை விமல் குழந்தைவேலின் நாவலில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாகும்.

டென்மார்க்கில் இருந்து எழுதும் கி. செ. துரை சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரின் ‘திரியாப்பாரை’ சிறுகதையும் ‘சுயம்வரம்’ என்ற நாவலும் இவ்வகையில் கவனத்திற்கு உரியனவாகின்றன. ‘சுயம்வரம்’ நாவலில் வடமராட்சி கடற்கரைப் பிரதேச மக்களின் வாழ்வும் அவர்களின் மொழியும் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்.

“பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில் பன்னிரெண்டாம் நம்பர் து}ண்டில்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. தங்கூசியை நன்றாக இழுத்து, விரலிடுக்குகளால் நீவி பக்குவமாக தூண்டில்களில் பெருக்கிக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலின் அநுபவமும், பொறுமையும் அவர் போடும் முடிச்சுக்களின் இறுக்கத்தில் பரிமளிக்கும். ஆகையால் தான் தூண்டில் போடும் கிட்டத்திற்கு அரிப்புக்கட்டி ஈயக்குண்டு போடுவதில் அந்த வட்டாரத்தில் மயிலருக்குத் தனிப்பெயருண்டு.” (சுயம்வரம்)

‘இந்த முறை விளைமீன் சீசனை ஒரு கை பார்த்துப்போடவேணும்’ என்று நினைத்துக் கொண்டே கிட்டத்தையும் தூண்டில்களைப் பிணைத்திருந்த அரிப்பையும் இணைத்துப் போட்ட பிரதான முடிச்சையும் ஒரு மூச்சுக் கொடுத்து இறுக்கிக் கொண்டபோது: வெளியே அவரது மனைவி ஆச்சிமுத்துக் கிழவி யாரையோ திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார்’ (சுயம்வரம்)

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ நாவலும் பிரதேசச் செல்வாக்கைக் கொண்ட நாவலாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்பிள்ளைகளின் கதையைக் கிராமிய மணங்கமழ சொல்ல வருகின்ற ஆசிரியர் அம்மண்ணுக்கோpய வழிவழியாக வந்த மரபுகளை வழக்கடிபாடுகளை எடுத்துக் காட்டுகி;ன்றார்.

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலின் மொழிநடையை தீவகத்திற்குரியது என்ற ஒரு கூற்றும் உள்ளது. இந்நாவலில் மொழி தீவகத்திற்குரியதாக இருந்தாலும் அப்பிரதேச மக்களின் உரையாடல் மொழியும், தமிழ்ப்போராளி அமைப்புக்கள் தமக்கேயுரிய ஒரு மொழிநடையினை கையாள்வதனை இந்நாவல் பதிவுசெய்வதனை அவதானிக்க முடியும்.

‘ஹெய் நிலத்தில வடிவா சப்பாணி கொட்டி இரும் ஐஸே’ காலில குந்தியிருந்த ரொக்கிராஜ் பொத்தெண்டு நிலத்தில சப்பாணிகொட்டி சக்கப்பணிய இருந்தான். ‘என்ன சவம் வந்தது வராததுமாய் மாஸ்டரிட்ட ஏச்சு வாங்கி;ப் போட்டேனே’ எண்டு அவன் சாpயாய்க் கவலைப்பட்டான். (கொரில்லா, ப. 66)

“ஐயோ தம்பியவை இஞ்ச ரத்தத்தைப் பார்த்தீங்களோ? நான் பிள்ள குட்டிக்காரன் கண்டீங்களோ? இந்தக் கொரில்லா எண்டுறவன் நெடுக நெடுக கடையில வந்து வெத்திலை, பீடி, சுருட்டு எண்டு நித்தம் ஒரு அரியண்டம் குடுத்துக் கொண்டேயிருக்கிறான். நானும் வயித்துப்பாட்டுக்காய் ஊர் விட்டு ஊர் வந்து கடை திறந்த இந்த ரெண்டு வரியத்திலயும் ஒரு நாள் எண்டாலும் அவனுக்கு குடுத்த சாமான்களுக்கு ஒரு சதமெண்டாலும் வேண்டியறியன்….” (கொரில்லா, ப. 94)

இந்த இரண்டு உரையாடலுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதனைக் கண்டு கொள்ளலாம். ஒரு வகையில் இளைஞர்களின் உரையாடல் ஈழத்துக்கேயுரிய பொதுவான நியமத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இவையும் கூட பிரதேசச் செல்வாக்காகக் கருதலாம்.

இவ்வகையில் புலம்பெயர் இலக்கியத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதேசச் செல்வாக்கினை கண்டுகொள்ள முடியும். ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் வாழ்வும் அந்த வாழ்வினோடு இரண்டறக் கலந்துவிட்ட தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளும் மிக அழகாகப் புலம்பெயர் படைப்புக்களில் பதிவு பெற்றுள்ளன. இவை பற்றிய மேலதிக பார்வைகளும் முன்வைக்கப்படவேண்டும். அதேபோல் புலம்பெயர் படைப்புக்களின் அந்தந்த நாட்டு வாழ்வனுபவங்களும் அப்பிரதேசத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளும் எடுத்து நோக்கப்படவேண்டும். அப்போதுதான் பொதுமைப் பண்புகளுள்ளே பல சிறப்புக் கூறுகள் இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும். அதற்கு ஓரு அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

நன்றி :- ஞானம் 100 வது இதழ்/ pathivukal.com

சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்









சு.குணேஸ்வரன்..................................

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு வீச்சுமிக்க எழுத்தாக பெண்ணிய எழுத்துக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பெண் தனிமனித வாழ்விலும் குடும்ப மற்றும் சமூக வாழ்விலும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாதலும் அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் சிந்தனையையும் அதிகமான பெண் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் சுமதிரூபன்> 1983இல் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவரின் யாதுமாகி நின்றாள் என்ற சிறுகதைத் தொகுப்பு 13 கதைகளைத் தாங்கி அவுஸ்திரேலிய மித்ர வெளியீடாக வந்துள்ளது.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.

1. பயண இடைவெளியின்போது உடலும் உளமும் சிதைக்கப்பட்ட பெண்.

2. தமிழ்ச் சமூக மரபிலே தனது தனித்தன்மைகளை இழந்த பெண்.

3. தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெண்.

4. சமூகத் தடைகளை உடைத்து வெளியேறும் பெண்.

ஆகியோர் சுமதிரூபனின் கதைகளிலே தம் உணர்வுகளைக் கொட்டிக் கதை சொல்கின்றனர். மேலைத்தேய கலாசார வாழ்வின் ஒருபாலியல் குறித்த கதைகளும் புதிய கருத்துக்களை முன்வைக்கின்றன.

தமிழ் புலம்பெயர் படைப்புலகில் இதுவரை பேசப்படாத பிரச்சனை ஒன்று இந்தத் தொகுப்பின் ஊடாகத்தான் முதல் முதல் முன்வைக்கப்படுகிறது. இது இலக்கிய உலகில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சனை. அதாவது ‘பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல்’ இதுவரை நான் அறிந்தவரையில் வேறு தொகுப்பில் இப்பிரச்சனை எழுதப்பட்டதாகத் தொpயவில்லை. அதனை சுமதிரூபன் துணிந்து முன்வைக்கின்றார்.

பெண் உடல் பயண இடைவெளிகளில் சிதைக்கப்படல் எழுத்தி;ல வந்தமை மிகக்குறைவு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பாரிஸ் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் கி. பி. அரவிந்தனின் கூற்று ஒன்று இதனை மேலும் வலுவாக்குவதனை எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன்.

“ தாயகம் துறந்து தொடங்கப்படும் பயணமானது தங்கள்; இலக்கான ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்குள் நுழையும் வரையான காலது}ர இடைவெளியானது துன்பியல் மிகுந்த பெருங் கதையாகும். இந்தப் பயணகால இடைவெளியில்தான் நமது பெறுமானங்கள், ஏன் பவுத்திரங்கள் எல்லாமே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இப்பெருங்கதை இதுவரை சொல்லப்படவில்லை.” (பாரிஸ் கதைகள் முன்னுரையில் )

ஆனால்> சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள் என்ற தலைப்புக்கதை இதனை சொல்லத் தொடங்கியுள்ளது. பயண இடைவெளியில் ஏஜென்சியின் பயமுறுத்தலுக்கு ஆளாகிச் சிதைபடும் பெண் உடல் குறித்த கதை தொகுப்பில் வலிமையான கருத்தினை முன்வைக்கின்றது.

“ஓ… உன்னைப் பற்றித்தான் எனக்கு நல்லாத் தொயுமே. ஷீப்பா ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறன். எங்கட ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணவேணும் எண்டு சொல்லிப் போட்டு தொpயாத இடங்களுக்கு பொம்பிளைகளைக் கூட்டிக் கொண்டு போய் உன்ரை ஆசைக்கு கட்டுப்பட வேணும் இல்லாட்டி அங்கேயே விட்டிட்டுப் போயிடுவன் எண்டு பொம்பிளையளைப் பலி போடுற ஆசாமி நீ. எத்தினை எத்தினை பொம்பிளையள் பயத்தால உன்ர ஆசைக்கு பலியாச்சினம். கலியாணம் செய்தவரைக்கூட நீ விட்டு வைக்கேலை. உன்னால மனம் பாதிச்சு தற்கொலை செய்தாக்களைக் கூட எனக்குத் தொpயும். உன்ர விளையாட்டு எல்லாரிட்டையும் சாpவராது.

இந்த ஆர்த்தியைப் போலவும் சில ஆக்கள் இருக்கத்தான் செய்யினம். அப்ப உன்னட்டை அம்பிட்டுப் பயத்திலை பலியாகிப் போனது உண்மைதான் ஆனால் நீ இப்ப பாக்கிற ஆர்த்தி வேற. நான் எதுக்கும் துணிஞ்சிட்டன். உன்ர குடும்பத்தைப் பழிவாங்க வேணும் எண்டுதான் உன்ர தம்பியைக் கலைச்சுக் கலைச்சு காதலிச்சன். பிறகுதான் தொpஞ்சுது உன்னட்ட இருக்கிற எந்தப் கெட்ட குணமும் ராகுலிட்ட இல்லை. எனக்கு அவர்தான் புருஷன்.” (யாதுமாகி நின்றாள்)

திருமணத்தின் பின்னர் பெண்கள் தமது தனித் தன்மைகளை இழந்து விடுவதை உணர்த்தும் ‘அம்மா இது உன் உலகம்’ என்ற கதையும்> குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணின் வன்முறைக்கும் பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகி சமூகத் தளைகளை மீறி வெளியே வரமுடியாத நிலையில் பெண்களி;ன் உணர்வுகள் முடங்கிப் போதலை உணர்;த்தும் அகச்சுவருக்குள் மீண்டும்> வடு> பவர்கட்> ஆகிய கதைகளும் பெண்> உடல் உள ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாதலைச் சித்தாpக்கும் கதைகளாக அமைகி;ன்றன. இதனாலேதான்>

“ வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு பெண்நிலை நோக்கினுள் விளையும் மோதல்களினதும் பாலியல் உணர்ச்சிகளினதும் சுய கேள்விகளையும் நாம் சுமதிரூபனின் கதைகளில் காணமுடியும்.”

என சுவிஸ் றஞ்சி குறிப்பிடுகிறார்.

துணிச்சலான பெண் இந்த ஒடுக்குமுறைகளுள் இருந்து வெளியே வந்து விடுகிறாள். அவளுக்கு படிப்பும் தொழில் புரிந்து சம்பாதிக்கும் மனோதிடமும் வந்து விடுகின்ற போது குடும்பம் என்ற அமைப்பில் இருந்து கூட வெளியேறிவிடுகின்றாள். இந்நிலையில் பெண்@ சமூகத்தில் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொள்கிறாள். இதனையே ‘ஆதலினால் நாம்’ என்ற கதை உணர்த்துகின்றது.

தனித்தனியே திருமணமான இரண்டு பெண்கள். இருவரும் பிள்ளைகள் உள்ளவர்கள். குடும்பத்தில் கணவன்மாரின் வன்முறையில் இருந்து விடுபட்டு வீட்டை விட்டு வெளியேறி இரு பெண்களும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். ஒரு பாலியல் உறவு குறித்த கதையாக உள்ள இக்கதை மேலைத்தேய வாழ்முறையின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது. இது எமது தமிழ்ச் சமுகத்தைப் பொறுத்தவரையில் சாத்தியமானது அல்ல. ஆனால் புலம்பெயர் வாழ்வுச் சூழல் தவிர்க்கமுடியாத வகையி;ல் இந்நிலையை ஏற்படுத்திவிடுகின்றது.

குறிப்பாக 70 களின் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதப் பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பையும்> சமூக அமைப்பையும் ஆணின் மேலாதிக்கத்தையும் புறக்கணித்து வாழத் தலைப்பட்டவர்கள். பாலியல் உரிமையும்> தன்னின அனுபவமும் குழந்தைகளின் கூட்டுப் பாதுகாப்பும் இவர்களின் செயற்பாடுகளில் சிலவாகும். இந்நிலையில் சுமதிரூபனின் சில பாத்திரங்கள் குடும்ப அமைப்பைப் புறக்கணித்துத் தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் தீவிரவாதப் பெண்ணியத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கிறது.

‘அவன் அப்படித்தான்’ என்ற கதையும் ஒருபாலியல் உறவு குறித்த கதைதான். சத்தியனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால் அவன் தனது நண்பனுடன் கொண்ட உறவின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றான். மேலைத்தேய கலாசார சூழலில் ஏற்பட்டு வந்துள்ள இந்த மாற்றம் சியாம் செல்வதுரையின் Funny Boy நாவலை தழுவி எழுதப்பட்ட கதையாக அமைகின்றது. தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதை கதை குறித்து நிற்கின்றது.

சோதனை முயற்சியாக எழுதப்பட்ட கட்டிடக் காட்டுக்குள் என்ற குறியீட்டுக் கதையில் கூறப்படும் கருத்தில் தெளிவு போதாமை தொpகிறது. பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் ஏனையவற்றிலும் யதார்த்தம் பேணப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் சில கதைகள் பலத்த விமர்சனங்களை முன்வைக்க களம் அமைத்துள்ளன.

இவ்வகையில் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை முன்வைத்துள்ள இத்தொகுப்பில் இதுவரை பேசப்படாத பிரச்சனைைகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய வாழ்வியற் சூழல் இவ்வாறான கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பெண் படைப்புலகிற்கு வலுச்சேர்க்கும் படைப்பாக ‘யாதுமாகி நின்றாள்’ திகழ்கின்றது எனலாம்.

நன்றி :- தினகரன் வாரமலர்

Tuesday, March 24, 2009

ஆழியாளின் துவிதம்








சு. குணேஸ்வரன்………………..

‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் தற்கால இலக்கிய உலகில்@ இக்கவிதைத் தொகுதி புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் படைப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.

பெண்-மொழி-கவிதை: மொழிசார் சாலைப் பயணம் என்ற தெ. மதுசூதனனின் ஆழமான தொடக்க அறிமுகத்துடன் அழகான அமைப்பில் அமைந்துள்ள இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைகள் அனைத்திற்கும் தாயக வாழ்வும் புலம்பெயர் தேசத்து வாழ்வும் இணைந்த உணர்வுநெறி அடிப்படையாக அமைந்துள்ளது. சில கவிதைகளில் இரண்டையுமே வேறுபிரித்து அறியமுடியாதபடிக்கு அதன் உள்ளுணர்வு பின்னிப் பிணைந்துள்ளது.

ஆழியாளின் கவிதைகள் அனைத்தும் சுட்டுகின்ற பொருட்பரப்பு முக்கியமானது. இத்தொகுப்பினூடாக தாயக வாழ்வின் ஞாபக அடுக்குகளில் இருந்து பல உணர்வு வெளிகள் விரிகின்றன. வாழ்வு பற்றிய பிடிமானமும் அதற்கான எத்தனமும் இந்தச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதும்> புலம்பெயர் தேசத்தில் அந்நியமாகிப் போன வாழ்வு நிலையும்> பெண் தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதலும்> பெண் தன் தனித்துவத்தைக் கட்டமைத்தலுமாக இத்தொகுப்பின் கவிதைகள் பல வழிகளில் பயணிக்கின்றன.

பெண் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான எழுச்சியும்> பெண் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்தலுமாக இதுவரை பயணித்து வந்த பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வளவு து}ரம் முக்கியமோ@ அதே அளவு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் தற்கால இலக்கிய உலகில் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தன்னை தன் எழுத்துக்களுக்கூடாக மறுபிரதி செய்தலும் தன் உணர்வுகளையும் தன் மொழியையும் எழுதுதலாயும் உள்ளது. இது காலம் காலமாக இருந்த தடத்தை அழித்து புதிய தடத்தை எற்படுத்தும் நிலை. இதன் ஒரு அம்சமாகத்தான் ‘இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை’ என்று பெண்ணியல் திறனாய்வாளரான ஹெலன் சீக்ஸீஸ் (Helene Cixous) எழுதியுள்ளார். இதனாலேயே பெண்> பெண்உடல்> பெண்மொழி என்பன இன்றைய இலக்கியச் சூழலில் மிகுந்த விவாதத்திற்கு உட்பட்டிருக்கின்றது. பெண்கள் தமக்கான மொழியைக் கட்டமைப்பதன் மூலம் தமக்கான விடுதலையைச் சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையும் இன்று வலுப்பெற்று வருகின்றது. இவற்றை மனங்கொண்டுதான் ஆழியாளின் படைப்பினை நோக்கமுடியும்.

காமம்> விடுதலை> தடம் இதுபோன்ற பல கவிதைகளை ஆழியாளின் பெண் மொழிக்கு உதாரணமாகக் காட்டலாம். ‘தடம்’ என்ற கவிதையில்

“வெகு இயல்பாய்

என் தடமழியும்

வள்ளம்

பதித்த நீர்ச் சுவடு போல

காற்றுக்

காவும்

மீன் வாசம் போல

கடற்கரைக் காலடியாய்

வெகு இயல்பாய்

என்; தடமழியும்

நாலு சுவருள்

ஒற்றப்படும்

மென் உதட்டு முத்தம் போலவும்

எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும்.

வெகு இயல்பாய்

என் தடமழியும்

ஒளி விழுங்கின வானவில்லாய்.”

தனது முதலாவது தொகுப்பிலேயே ‘என் ஆதித்தாயின்/ முதுகில் பட்ட/ திருக்கைச் சவுக்கடி/ நான் காணும் ஒவ்வொரு/ முகத்திலும்/ தழும்பாய் தேமலாய்/ படர்ந்து கிடக்கிறது’ என்ற பிரகடனத்துடன் கவிதை எழுதியபோதே கவனிக்கப்பட்டவர் ஆழியாள். துவிதம் தொகுப்பில் அமைந்துள்ள ‘காமம்’ என்ற பிறிதொரு கவிதையில்

“உயரும்

மலையடிவார மண்கும்பிகளுள்

திணறி அடக்கமுறும்

மனித மூச்சுகளும்

பள்ளங்களின்

ஆழப்புதைவில்

அலறி ஓயும் குரல்களின்

இறுதி விக்கல்களும்

உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு

இருளுக்கு கூர் விழிகளும் உண்டு

பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்

உண்டு இன்னொன்று

அவளுக்கு.”

ஆழியாளின் கவிதைகளின் பலமே அதன் மொழிதான். ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு பெண்கள் தமக்கான மொழியை உருவாக்குதலும் இவரின் படைப்புநெறியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். தமிழ்ச்சூழலில் அம்பை> மாலதி மைத்திரி> குட்டிரேவதி> சுகிர்தராணி> சல்மா> புகலிடத்தில் ரஞ்சனி> சுமதிரூபன் ஆகியோரின் எழுத்துக்களில் இதற்கான எத்தனத்தை தற்காலத்தில் அவதானிக்கமுடியும்.

தாயக வாழ்வு தந்த போரின் வலிகளைப் பதிவுசெய்யும் கவிதைகளில் ‘சி;ன்னப்பாலம்’ கவிதை ஏனைய பல கவிதைகளுக்கு தொடர்ச்சியாய் அமைந்துள்ளது. அது கொண்டு வரும் படிம அடுக்குகள் முக்கியமானவை. அதில் வெளிப்படும் குரூரம் காட்சிப்படிமாகத் தொடர்வதனை கவிதையின் வாசிப்பினூடாக கண்டுகொள்ளலாம். இது போன்ற உணர்வு வெளிப்பாடுகளை பல ஈழக்கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சேரனின் ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ கவிதையில் எலும்புக்கூடுகள் அணிநடையாகச் சென்ற பின்னரும் தொடரும் ஓசை ஒழுங்குபோல் ஆழியாளின் இந்தக் கவிதையிலும் தொடர்கிறது. இதனை அதியதார்த்தக் (Surrealism) கவிதைகளில் வெளிப்படும் பண்புக்கு இணையாக ஒப்பிடலாம்.

“------------------------------

சின்னப் பாலத்தடிக்கு

நித்தம் செட்டை அடித்து வந்தன

வழக்கத்திலும் கொழுத்த

ஒற்றைக்கால் கொக்குகளும்> சுழியோடும் நீர்க்கோழிகளும்.

அவற்றிலும் அதிகமாய்

விளைந்து கிடந்தன

ஊறி அழுகிய பிணங்களின்

வாசனை முகர்ந்து> சுவை அறிந்த

ஜப்பான் குறளிகளும்> குறட்டை பெட்டியான் மீன்களும்.

கபறக்கொய்யாக்களோ

எவ்வித நிர்ச்சலனமுமின்றி

நீரிற் பொசிந்து}றிய மனிதக் கபாலங்களை

ஆளுக்கு ஐந்து ஆறாய்ப்

பங்கிட்டுக் கொண்டன – சண்டை சச்சரவின்றி

சமாதானத்துடனே.

தேவைப்படும்போது

அவை பின்னிற்பதில்லை

தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக்

கறுத்த விழிகளைத்

திராட்சைகளாய் உறிஞ்ச.

---------------------------”

இவை தவிர ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம். ‘மரணம்’ என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

“கலங்கரை விளக்கத்து

இரவுக் காவலாளியாகவும்

ஆறடிக் குழியுள்

மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட

பிணமொன்றைப் போலவும்

தனித்தே

மிகத் தனித்தே இருக்கின்றேன்.”

கொடூரமான கனவுகளே வாழ்வாகிப் போன நிலையில் கவிதை சார்ந்த அழகியலும் சூழல் சார்ந்தே இயங்குவதனைக் கண்டு கொள்ளலாம். இது இவரது அதிகமான கவிதைகளுக்குப் பொருந்தக்கூடியது. சின்னப்பாலம்> கி.பி.2003 இல் தைகிரீஸ்> மரணம்> ஞாபக அடுக்குகள் ஆகியவற்றில் வரும் படிமங்கள் முக்கியமானவை.

உணர்வும் தர்க்கமும் இழையோடும் கவிதைகளில் அவை வெளிப்படுத்த விளையும் பொருட்பரப்பும் அதன் அழகியலும் மிகக் கட்டிறுக்கமாக பல கவிதைகளில் அமைந்துள்ளன. குறியீட்டு அர்த்தமுடைய கவிதைகள் வாசிப்பில் பல அர்த்தத் தளங்களுக்கு இடங்கொடுக்கின்றன.

கவிதைகளின் அர்த்தத்திற்கு ஏற்ப சில கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சாத்தியமில்லாத பந்தி பிரிப்பு தவிர்த்திருக்கக்கூடியதே. சின்னப்பாலம்> விமானநிலையச் சந்திப்பு ஆகியவற்றில் வரும் இறுதி இரண்டு பந்திகளுமே அவை.

அதிகளவான பெண் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. இது படைப்பு நெறி சார்ந்து நோக்கும்போது பெண் படைப்பாளிகளிடம் இருக்கும் முக்கிய குறைபாடாகும். அந்த நிலையில் இருந்து விடுபட்டு தொடர்ச்சியாக தனது படைப்பைச் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஆழியாளுக்கும் உண்டு. அதற்குரிய வீச்சும் புதிய விளைவும் ஆழியாளிடம் நிரம்பவே உள்ளன என்பதை வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புக்களுமே நிரூபிக்கின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புக்களில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களில் தவிர்க்க முடியாததுமான ஒரு தொகுப்பாக துவிதம் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

thanks:- jeevanathy magazine jaffna,thinnai.com