Saturday, March 28, 2009

புலம்பெயர் தமிழ்ப்படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கு



சு.குணேஸ்வரன்..................................

புலம்பெயர் படைப்பிலக்கியம் தோற்றம் பெற்று இற்றைக்கு இரண்டு தசாப்தங்களைக் கடந்து விட்ட போதிலும் இவ் இலக்கியம் பற்றிய தேடல் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதனை நுணுகி நோக்கும்போது இன்னமும் பல வெளிச்சங்கள் எங்களுக்குத் தென்படும். அந்த வகையிலே இக்கட்டுரையானது புலம்பெயர் தமிழ்ப் படைப்புலகில் பிரதேசச் செல்வாக்கினை ஆராய்வதற்கான ஓர் அறிமுகக் குறிப்பாகவே அமைகின்றது.

1983 இன் பின்னர் இலங்கையில் உத்வேகம் பெற்ற இனவுணர்வுச் சூழல் பெருமளவான ஈழத் தமிழர்களை மேற்குலக நாடுகளை நோக்கிப் புலம்பெயர வைத்தது.

புலம்பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள் நவீன இலக்கிய வடிவங்களாகிய கவிதை சிறுகதை நாவல் ஆகியவற்றையே முதன்மையாக கருத்திற் கொள்கின்றோம். அவற்றின் உள்ளடக்க ரீதியான பண்புகளைச் சுட்டும்போது ஒரு பொதுமைக்குள் நின்றுகொண்டே இதுவரை விவாதித்திருக்கின்றோம்.

ஈழத்து இலக்கியத்தின் போக்கினை மதிப்பிடும்போது எவ்வாறு பிரதேச அலகுகளை மனங்கொண்டு எமது மதிப்பீட்டினை முன்வைக்கிறோமோ அதேபோல் புலம்பெயர் இலக்கியத்தின் பிரதேச வேறுபாடுகளை மனங்கொண்டு புலம்பெயர் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டினை முன்வைக்கும்போது சில தெளிவீனங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படும் என்று கருதலாம்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற மூன்று கண்டங்களிலும் (அவுஸ்திரேலியா,அமெரிக்கா,ஐரோப்பா) உள்ள நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் சூழலியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அவை குறிக்கும் உள்ளடக்கத்தை மிக நுண்மையாக வகைப்படுத்தவும் முடியும்.

அவுஸ்திரேலியா தனியாகவும்,அமெரிக்காக் கண்டத்திலுள்ள கனடா, அமெரிக்கா தனித்தனியாகவும், ஐரோப்பாக் கண்டத்திலுள்ள ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவிய நாடுகளான நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, பின்லாந்து, சுவீடன், ஆகியவற்றைத் தனித்தனியாகவும் நோக்க முடியும்.

புலம்பெயர் படைப்புலகின் உள்ளடக்கத்தினை தாயகநினைவு, அகதிநிலை, தொழிற்தள அநுபவம், புதிய பண்பாட்டுச் சூழல், நிறவாதம், இனவாதம், புவியியற்சூழல், வித்தியாசமான வாழ்வுலகு, அந்நியமயப்பாடு, அனைத்துலக நோக்கு, என பொதுமைப் பண்பிற்கூடாகச் சுட்டினாலும் இவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்று கருத முடியாது. சில நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் சில பண்புகள் மிக அதிகமாகவும் மற்றைய நாடுகளில் இருந்து வருகின்ற படைப்புக்களில் இப்பண்புகள் மிகக் குறைவாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

உதாரணமாக இனவாதம் நிறவாதம் சார்ந்த பிரச்சனைகளை ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலைப்பாடுகளுக்கு இடையில் வேறுபாடுகள் உண்டு. அதேபோல் பிரான்ஸ் ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் மொழிசார்ந்து தமிழர்கள் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கும் இலண்டன் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. இதுபோல்தான் புவியியல் சார்ந்த இயற்கை அமைப்பிலும் வேறுபாடு உண்டு.

இவற்றை தனித்தனியான நுண்ஆய்வின் மூலமே கண்டு கொள்ள முடியும். இதற்கு அமைவாக இக்கட்டுரையானது ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு புலம்பெயர் படைப்புலகில் காணப்படுகின்றது என்பதனை ஓர் ஆரம்ப கட்ட முயற்சியாக எடுத்துக் காட்ட முயல்கின்றது.

முதலில் கவிதைகளில் நோக்குவோம்.

“பலா இலை மடித்துக் கோலி

ஈர்க்கில் துண்டை முறித்துச் செருகி

ஓடியல் மீன் கூழை வார்த்து

அம்மா அப்பா தம்பி ஆச்சி என

சுற்றமும் சூழ இருந்து

உறிஞ்சிக் குடித்த நாட்கள்”

என்று தன் உறவுகளுடன் சொந்த மண்ணில் இருந்து மகிழ்வாக உண்டு களித்த நாட்களை நினைவுகளாக மீட்டுப் பார்க்கின்றார் கவிஞர் செழியன். இங்கு எமது மண்ணுக்கேயுரிய உணவுப் பழக்கம் எடுத்துக் காட்டப்படுகின்றது.

தாயகத்தை விட்டுப் பிரிந்து புவியியற் சூழலிலிருந்து பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ முற்படும்போது, சொந்தநாட்டு மண்மீதான நினைவும் ஏக்கமும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும். பனிநிறைந்த வீதிகளும் வானளாவிய கட்டடங்களும் நிறைந்த தேசத்திலே இயந்திர வாழ்வுடன் போராடி மூச்சுத் திணறி வாழும் வாழ்க்கையிலே கவிஞா;கள் தமது தேசத்தை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றார்கள்

தாயக மண்ணின் இயற்கை அழகும் அதனோடு இயைந்த வாழ்வும் நினைவுகளை மீட்கின்றன. கிடுகுவேலி. பனைவடலி, கிணறு, வயல், வீடு, முற்றம், கோவில், எல்லாமே நினைவுகளாகின்றன. இதனாலேயே கவிஞர் செல்வம் ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

“சிறுகுருவி வீடு கட்டும்

தென்னோலை பாட்டிசைக்கும்

சூரியப் பொடியன் செவ்வரத்தம் பூவை

புணரும் என் ஊரில் இருப்பிழந்தேன்.

அலை எழுப்பும் கடலோரம் ஒரு வீடும்

செம்மண் பாதையோரம்

ஓர் தோட்டமும்

கனவுப் பணம் தேட

கடல் கடந்தோம்

நானும் நாங்களும்

அகதித் தரையில்

முகமிழந்தோம்.”

என்று கட்டிடக் காடாகிப் போன அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டு ஊரின் நினைவினை மீட்டுப் பார்க்கின்றார். தாயக மண்ணுடனான உறவில் இருந்து பிரிந்து ஆண்டுகள் பலவாகிய பின்னரும் காலவெள்ளம் எதையெல்லாம் புரட்டிப் பார்க்கின்றது என்பதனை பின்வரும் கவிதை வரிகள் ஊடாக நோக்கலாம்.


“வித்து வெடித்து முளைத்து விட்ட மண்ணிலிருந்து

பிடுங்கி எறியப்பட்டு

ஆண்டுகள் பத்தாயிற்று

நான் புரண்ட செம்பாடு

வியர்வையில் குழைத்து எழுப்பிய வீடு

மூலைக் கன்று மா

முற்றத்து மல்லிகை

எஞ்சிக் கிடந்த அப்பாவின் புகைப்படம்

ஊர் சுற்றக் கிடைத்த சைக்கிள் கட்டை

சூரன் நாய்

காலவெள்ளம் எதையெல்லாம்

புரட்டிச் செல்கிறது.”

என்று ‘பனிவயல்; உழவு’ தொகுப்பின் முன்னுரையில் கவிதை வரிகளாகவே எழுதுகின்றார் திருமாவளவன்.


இவ்வாறாக ஈழத்து மண்ணின் வாழ்வும் வளமும் தாயக நினைவு சார்ந்த கவிதைகளிலே பிரதேசச் செல்வாக்குடன் பதிவுபெறுவதனை கண்டு கொள்ளலாம்.

இதேபோல் புனைகதைகளில் ஈழத்துப் பிரதேச செல்வாக்கு எவ்வாறு பதிவு பெற்றுள்ளது என்பதனையும் நோக்கமுடியும்.

அ. இரவியின் ‘காலம் ஆகி வந்;த கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பில் யாழ்ப்பாண மண்ணுக்கேயுரிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒரு சிறுவனின் உளநிலையில் கூறப்படும் கதையூடாக கதைக்குரிய காலத்தையும், எம் மண்ணுடன் இரண்டறக்கலந்த வாழ்வையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

பிள்ளைப் பருவ நினைவுகளுடாக (child hood) பாடசாலைப் பருவ வாழ்க்கை, கோயிற் சம்பவங்கள், ஊர் நினைவுகள் (இதனுள் கோயிற்பண்பாடு, சமூகத்தொடர்பு, மரபு, நம்பிக்கை, கலை என்பன ஊடுபாவாக கதைகளில் உள்ளடங்கியுள்ளன) என எல்லாவற்றையும் சம்பவங்களாக அடுக்கிச் செல்கிறார். ஈழத்துப் படைப்பிலக்கியத்திலே இவ்வாறான பிள்ளைப் பருவ நினைவினூடாக, பிரதேசச் செல்வாக்குடன் கதை கூறியவர்கள் மிகக் குறைவென்றே கூறலாம்.

இதேபோல் அ. முத்துலிங்கத்தின் பல சிறுகதைகள் யாழ்ப்பாண மண்ணின் மணங்கமழ சித்தாpக்கப்பட்டுள்ளன. முத்துலிங்கத்திடம் புறவுலகம் சார்ந்த சித்தாpப்பு மிக நுண்மையாக இருந்தபோதும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் இரத்தமும் சதையுமான வாழ்வனுபவம் மிகக் குறைவு என்றே கூறலாம். ஷோபாசக்தி, குமார்மூர்த்தி, சக்கரவர்த்தி, பொ. கருணாகரமூர்த்தி ஆகியோர் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் முத்துலிங்கம் காட்டுகின்ற புலம்பெயர் வாழ்வனுபவத்திற்கும் இடையில் நிரம்ப வேறுபாடுகள் உள்ளன.

முத்துலிங்கத்திடம் காணக்கூடிய பல விசேட அம்சங்களில் ஒன்றாக ஈழத்து அடுக்கமைவுகளைத் தீண்டாத கதைகூறும் பாணி மிக முக்கியமானது. முத்துலிங்கத்தின் மனக்கிடங்கின் ஆழத்திலிருந்து வெளிப்படும் பல கதைகளில் யாழ்ப்பாணத்து வாழ்வினோடு ஒட்டிய பிரதேசச் செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும். ‘தில்லையம்பல பிள்ளையார் கோயில், அம்மாவின் பாவாடை’ ஆகிய கதைகளை இவற்றுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

‘அப்பா முன் சீட்டில் இருந்து சுருட்டைப் பற்ற வைத்தார். வுட்போட்டில் நின்றபடி ஒரு கை உள்ளே பிடிக்க, மறு கை வெளியே தொங்க சின்னமாமா சிகை கலைய, அங்கவஸ்திரம் மிதக்க ஒரு தேவதூதன் போல பறந்து வந்தார். அந்தத் தருணத்தில் எனக்கு சின்ன மாமாவிடம் இருந்த மதிப்பு பன்மடங்கு பெருகியது.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

‘காரைக் கண்டதும் கட்டை வண்டிகள் எல்லாம் ஓரத்தில் நின்றன. சைக்கிள்காரர்கள் குதித்து இறங்கி வழிவிட்டனர். மூட்டை சுமப்பவர்களும்> பாதசாரிகளும் வேலிக்கரைகளில் மரியாதை செய்து ஒதுங்கினார்கள். இன்னும் பலர் வாயை ஆவென்று வைத்துக் கொண்டு, காரின் திசையை அது போய் பல நிமிடங்கள் சென்ற பின்னும்> பார்த்தபடி நி;ன்றார்கள். டிரைவர் பல சமயங்களில் பாதசாரிகளி;ன் வேகத்தை ஊக்குவிக்கும் முகமாக பந்துபோல உருண்டிருக்கும் ஒலிப்பானை அமுக்கி ஓசை உண்டாக்கினார்.’ (தில்லையம்பல பிள்ளையார் கோயில்)

இன்னோர் புறமாக, முத்துலிங்கம் தன் உலகளாவிய பயண அநுபவத்தின் மூலம் தமிழுக்குத் தரும் புதிய கதைகள் கவனத்திற் கொள்ளத்தக்கவை. அவை அந்தந்த நாட்டுப் பிரதேச அனுபவங்களாக விரிகின்றன. பாகிஸ்தான் பிரதேச அநுபவத்திற்கூடாகக் கூறப்படும் ‘ஒட்டகம்’ கதை இதற்கு நல்ல உதாரணமாகும். இதேபோல் ஏனையநாட்டு அனுபவங்களினூடாகவும் வரும் பல கதைகள் இவரிடம் உள்ளன. இவையெல்லாம் தனித்த பார்வைக்குரியன.

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற விமல் குழந்தைவேலின் ‘அசதி’ தொகுப்பிலுள்ள பல சிறுகதைகள் மட்டக்களப்பின் அக்கரைப்பற்று கோளாவூர் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு பிரதேசச் செல்வாக்கினை நமக்குக் காட்டுகின்றன. இவரி;ன் அசதி தொகுப்பிலுள்ள ‘ஆச்சியும் பூசாரியும், சின்னாம்பி, அசதி, பேய் நாவை, வெள்ளாவி’ ஆகிய சிறுகதைகள் சிலவற்றை எடுத்துப் பார்க்கலாம்.

விமல் குழந்தைவேலிடம் ஈழத்தின் கிராமியச் செல்வாக்குடன் கூடிய வாழ்வனுபவம் அவரின் படைப்புக்க@டாக வெளிப்படுதல் மிக முக்கியமானது. மரபுகள், நம்பிக்கைகள், வழக்காறுகள், என்பவற்றுடன் அவர் கையாளும் வட்டார வழக்கு மொழிநடையும் முக்கியமானது.

இதேபோல்தான் இவரின் ‘வெள்ளாவி’ என்ற நாவலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்நாவலில் இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசத்தின் கிராமியச் செல்வாக்கு உள்ளமை கண்டுகொள்ளலாம். கோளாவில், அக்கரைப்பற்று. தீவுக்காலை, பனங்காடு ஆகிய சிறு சிறு கிராமங்களைச் சுற்றியே கதைக்களம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்து மக்களின் வாழ்வுடன் சலவைத்தொழிலாளர் சமூகத்தின் உயிர்த்துடிப்பான வாழ்வும், தலைமுறை தலைமுறையாக அவர்களைச் சுரண்டி வாழும் போடியார் சமூகம் பற்றிய பதிவும் இந்நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

இந்நாவலின் மொழிநடைக்கு ஓர் எடுத்துக்காட்டாக,

முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை பிரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க> ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக் கொண்டு பொண்டுகள் நடக்க மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண் ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகராமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண்ணூட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப்போகோணும் எண்டு சொல்லுவாங்க (வெள்ளாவி)

‘இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்போமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சி வரச் சொல்லுகா’ (வெள்ளாவி)

மேலே எடுத்துக் காட்டிய ஆசிரியரின் எடுத்துரைப்பு மொழியும் பாத்திரங்களின் உரையாடலும் விமல் குழந்தைவேலின் நாவலில் மிக அருகருகாக வருவதனைக் கண்டு கொள்ளலாம். இந்த வட்டாரத்தன்மை விமல் குழந்தைவேலின் நாவலில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதாகும்.

டென்மார்க்கில் இருந்து எழுதும் கி. செ. துரை சிறுகதைகளும் எழுதி வருபவர். இவரின் ‘திரியாப்பாரை’ சிறுகதையும் ‘சுயம்வரம்’ என்ற நாவலும் இவ்வகையில் கவனத்திற்கு உரியனவாகின்றன. ‘சுயம்வரம்’ நாவலில் வடமராட்சி கடற்கரைப் பிரதேச மக்களின் வாழ்வும் அவர்களின் மொழியும் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம்.

“பிரித்து வைக்கப்பட்டிருந்த கடதாசிச் சரையில் பன்னிரெண்டாம் நம்பர் து}ண்டில்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. தங்கூசியை நன்றாக இழுத்து, விரலிடுக்குகளால் நீவி பக்குவமாக தூண்டில்களில் பெருக்கிக் கொண்டிருந்தார் கிழவர். தொழிலின் அநுபவமும், பொறுமையும் அவர் போடும் முடிச்சுக்களின் இறுக்கத்தில் பரிமளிக்கும். ஆகையால் தான் தூண்டில் போடும் கிட்டத்திற்கு அரிப்புக்கட்டி ஈயக்குண்டு போடுவதில் அந்த வட்டாரத்தில் மயிலருக்குத் தனிப்பெயருண்டு.” (சுயம்வரம்)

‘இந்த முறை விளைமீன் சீசனை ஒரு கை பார்த்துப்போடவேணும்’ என்று நினைத்துக் கொண்டே கிட்டத்தையும் தூண்டில்களைப் பிணைத்திருந்த அரிப்பையும் இணைத்துப் போட்ட பிரதான முடிச்சையும் ஒரு மூச்சுக் கொடுத்து இறுக்கிக் கொண்டபோது: வெளியே அவரது மனைவி ஆச்சிமுத்துக் கிழவி யாரையோ திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. வேலையைப் போட்டது போட்டபடி விட்டுவிட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார்’ (சுயம்வரம்)

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘தில்லையாற்றங்கரை’ நாவலும் பிரதேசச் செல்வாக்கைக் கொண்ட நாவலாகவே அமைந்துள்ளது. குழந்தைப் பருவத்தைத் தாண்டி குமரியாகிக் கொண்டிருக்கும் மூன்று பெண்பிள்ளைகளின் கதையைக் கிராமிய மணங்கமழ சொல்ல வருகின்ற ஆசிரியர் அம்மண்ணுக்கோpய வழிவழியாக வந்த மரபுகளை வழக்கடிபாடுகளை எடுத்துக் காட்டுகி;ன்றார்.

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலின் மொழிநடையை தீவகத்திற்குரியது என்ற ஒரு கூற்றும் உள்ளது. இந்நாவலில் மொழி தீவகத்திற்குரியதாக இருந்தாலும் அப்பிரதேச மக்களின் உரையாடல் மொழியும், தமிழ்ப்போராளி அமைப்புக்கள் தமக்கேயுரிய ஒரு மொழிநடையினை கையாள்வதனை இந்நாவல் பதிவுசெய்வதனை அவதானிக்க முடியும்.

‘ஹெய் நிலத்தில வடிவா சப்பாணி கொட்டி இரும் ஐஸே’ காலில குந்தியிருந்த ரொக்கிராஜ் பொத்தெண்டு நிலத்தில சப்பாணிகொட்டி சக்கப்பணிய இருந்தான். ‘என்ன சவம் வந்தது வராததுமாய் மாஸ்டரிட்ட ஏச்சு வாங்கி;ப் போட்டேனே’ எண்டு அவன் சாpயாய்க் கவலைப்பட்டான். (கொரில்லா, ப. 66)

“ஐயோ தம்பியவை இஞ்ச ரத்தத்தைப் பார்த்தீங்களோ? நான் பிள்ள குட்டிக்காரன் கண்டீங்களோ? இந்தக் கொரில்லா எண்டுறவன் நெடுக நெடுக கடையில வந்து வெத்திலை, பீடி, சுருட்டு எண்டு நித்தம் ஒரு அரியண்டம் குடுத்துக் கொண்டேயிருக்கிறான். நானும் வயித்துப்பாட்டுக்காய் ஊர் விட்டு ஊர் வந்து கடை திறந்த இந்த ரெண்டு வரியத்திலயும் ஒரு நாள் எண்டாலும் அவனுக்கு குடுத்த சாமான்களுக்கு ஒரு சதமெண்டாலும் வேண்டியறியன்….” (கொரில்லா, ப. 94)

இந்த இரண்டு உரையாடலுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதனைக் கண்டு கொள்ளலாம். ஒரு வகையில் இளைஞர்களின் உரையாடல் ஈழத்துக்கேயுரிய பொதுவான நியமத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. இவையும் கூட பிரதேசச் செல்வாக்காகக் கருதலாம்.

இவ்வகையில் புலம்பெயர் இலக்கியத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதேசச் செல்வாக்கினை கண்டுகொள்ள முடியும். ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் மக்களின் வாழ்வும் அந்த வாழ்வினோடு இரண்டறக் கலந்துவிட்ட தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளும் மிக அழகாகப் புலம்பெயர் படைப்புக்களில் பதிவு பெற்றுள்ளன. இவை பற்றிய மேலதிக பார்வைகளும் முன்வைக்கப்படவேண்டும். அதேபோல் புலம்பெயர் படைப்புக்களின் அந்தந்த நாட்டு வாழ்வனுபவங்களும் அப்பிரதேசத்திற்கேயுரிய சிறப்புப் பண்புகளும் எடுத்து நோக்கப்படவேண்டும். அப்போதுதான் பொதுமைப் பண்புகளுள்ளே பல சிறப்புக் கூறுகள் இருப்பதனைக் கண்டு கொள்ள முடியும். அதற்கு ஓரு அறிமுகக் குறிப்பாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.

நன்றி :- ஞானம் 100 வது இதழ்/ pathivukal.com

சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள்









சு.குணேஸ்வரன்..................................

நவீன தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு வீச்சுமிக்க எழுத்தாக பெண்ணிய எழுத்துக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. பெண் தனிமனித வாழ்விலும் குடும்ப மற்றும் சமூக வாழ்விலும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாதலும் அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் சிந்தனையையும் அதிகமான பெண் படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் பெண் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் சுமதிரூபன்> 1983இல் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவரின் யாதுமாகி நின்றாள் என்ற சிறுகதைத் தொகுப்பு 13 கதைகளைத் தாங்கி அவுஸ்திரேலிய மித்ர வெளியீடாக வந்துள்ளது.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.

1. பயண இடைவெளியின்போது உடலும் உளமும் சிதைக்கப்பட்ட பெண்.

2. தமிழ்ச் சமூக மரபிலே தனது தனித்தன்மைகளை இழந்த பெண்.

3. தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வில் ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பெண்.

4. சமூகத் தடைகளை உடைத்து வெளியேறும் பெண்.

ஆகியோர் சுமதிரூபனின் கதைகளிலே தம் உணர்வுகளைக் கொட்டிக் கதை சொல்கின்றனர். மேலைத்தேய கலாசார வாழ்வின் ஒருபாலியல் குறித்த கதைகளும் புதிய கருத்துக்களை முன்வைக்கின்றன.

தமிழ் புலம்பெயர் படைப்புலகில் இதுவரை பேசப்படாத பிரச்சனை ஒன்று இந்தத் தொகுப்பின் ஊடாகத்தான் முதல் முதல் முன்வைக்கப்படுகிறது. இது இலக்கிய உலகில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு பிரச்சனை. அதாவது ‘பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல்’ இதுவரை நான் அறிந்தவரையில் வேறு தொகுப்பில் இப்பிரச்சனை எழுதப்பட்டதாகத் தொpயவில்லை. அதனை சுமதிரூபன் துணிந்து முன்வைக்கின்றார்.

பெண் உடல் பயண இடைவெளிகளில் சிதைக்கப்படல் எழுத்தி;ல வந்தமை மிகக்குறைவு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பாரிஸ் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் கி. பி. அரவிந்தனின் கூற்று ஒன்று இதனை மேலும் வலுவாக்குவதனை எடுத்துக்காட்டலாம் என்று கருதுகிறேன்.

“ தாயகம் துறந்து தொடங்கப்படும் பயணமானது தங்கள்; இலக்கான ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய வலயங்களுக்குள் நுழையும் வரையான காலது}ர இடைவெளியானது துன்பியல் மிகுந்த பெருங் கதையாகும். இந்தப் பயணகால இடைவெளியில்தான் நமது பெறுமானங்கள், ஏன் பவுத்திரங்கள் எல்லாமே உடைந்து நொறுங்கிப் போகின்றன. இப்பெருங்கதை இதுவரை சொல்லப்படவில்லை.” (பாரிஸ் கதைகள் முன்னுரையில் )

ஆனால்> சுமதிரூபனின் யாதுமாகி நின்றாள் என்ற தலைப்புக்கதை இதனை சொல்லத் தொடங்கியுள்ளது. பயண இடைவெளியில் ஏஜென்சியின் பயமுறுத்தலுக்கு ஆளாகிச் சிதைபடும் பெண் உடல் குறித்த கதை தொகுப்பில் வலிமையான கருத்தினை முன்வைக்கின்றது.

“ஓ… உன்னைப் பற்றித்தான் எனக்கு நல்லாத் தொயுமே. ஷீப்பா ஆக்களைக் கூட்டிக் கொண்டு வாறன். எங்கட ஆக்களுக்கு ஹெல்ப் பண்ணவேணும் எண்டு சொல்லிப் போட்டு தொpயாத இடங்களுக்கு பொம்பிளைகளைக் கூட்டிக் கொண்டு போய் உன்ரை ஆசைக்கு கட்டுப்பட வேணும் இல்லாட்டி அங்கேயே விட்டிட்டுப் போயிடுவன் எண்டு பொம்பிளையளைப் பலி போடுற ஆசாமி நீ. எத்தினை எத்தினை பொம்பிளையள் பயத்தால உன்ர ஆசைக்கு பலியாச்சினம். கலியாணம் செய்தவரைக்கூட நீ விட்டு வைக்கேலை. உன்னால மனம் பாதிச்சு தற்கொலை செய்தாக்களைக் கூட எனக்குத் தொpயும். உன்ர விளையாட்டு எல்லாரிட்டையும் சாpவராது.

இந்த ஆர்த்தியைப் போலவும் சில ஆக்கள் இருக்கத்தான் செய்யினம். அப்ப உன்னட்டை அம்பிட்டுப் பயத்திலை பலியாகிப் போனது உண்மைதான் ஆனால் நீ இப்ப பாக்கிற ஆர்த்தி வேற. நான் எதுக்கும் துணிஞ்சிட்டன். உன்ர குடும்பத்தைப் பழிவாங்க வேணும் எண்டுதான் உன்ர தம்பியைக் கலைச்சுக் கலைச்சு காதலிச்சன். பிறகுதான் தொpஞ்சுது உன்னட்ட இருக்கிற எந்தப் கெட்ட குணமும் ராகுலிட்ட இல்லை. எனக்கு அவர்தான் புருஷன்.” (யாதுமாகி நின்றாள்)

திருமணத்தின் பின்னர் பெண்கள் தமது தனித் தன்மைகளை இழந்து விடுவதை உணர்த்தும் ‘அம்மா இது உன் உலகம்’ என்ற கதையும்> குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணின் வன்முறைக்கும் பாலியல் வக்கிரத்துக்கும் ஆளாகி சமூகத் தளைகளை மீறி வெளியே வரமுடியாத நிலையில் பெண்களி;ன் உணர்வுகள் முடங்கிப் போதலை உணர்;த்தும் அகச்சுவருக்குள் மீண்டும்> வடு> பவர்கட்> ஆகிய கதைகளும் பெண்> உடல் உள ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளாதலைச் சித்தாpக்கும் கதைகளாக அமைகி;ன்றன. இதனாலேதான்>

“ வாழ்வு குறித்த கேள்விகளை மட்டுமல்ல பல்வேறு பெண்நிலை நோக்கினுள் விளையும் மோதல்களினதும் பாலியல் உணர்ச்சிகளினதும் சுய கேள்விகளையும் நாம் சுமதிரூபனின் கதைகளில் காணமுடியும்.”

என சுவிஸ் றஞ்சி குறிப்பிடுகிறார்.

துணிச்சலான பெண் இந்த ஒடுக்குமுறைகளுள் இருந்து வெளியே வந்து விடுகிறாள். அவளுக்கு படிப்பும் தொழில் புரிந்து சம்பாதிக்கும் மனோதிடமும் வந்து விடுகின்ற போது குடும்பம் என்ற அமைப்பில் இருந்து கூட வெளியேறிவிடுகின்றாள். இந்நிலையில் பெண்@ சமூகத்தில் பல எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொள்கிறாள். இதனையே ‘ஆதலினால் நாம்’ என்ற கதை உணர்த்துகின்றது.

தனித்தனியே திருமணமான இரண்டு பெண்கள். இருவரும் பிள்ளைகள் உள்ளவர்கள். குடும்பத்தில் கணவன்மாரின் வன்முறையில் இருந்து விடுபட்டு வீட்டை விட்டு வெளியேறி இரு பெண்களும் பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். ஒரு பாலியல் உறவு குறித்த கதையாக உள்ள இக்கதை மேலைத்தேய வாழ்முறையின் தாக்கத்தை பிரதிபலிக்கின்றது. இது எமது தமிழ்ச் சமுகத்தைப் பொறுத்தவரையில் சாத்தியமானது அல்ல. ஆனால் புலம்பெயர் வாழ்வுச் சூழல் தவிர்க்கமுடியாத வகையி;ல் இந்நிலையை ஏற்படுத்திவிடுகின்றது.

குறிப்பாக 70 களின் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதப் பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பையும்> சமூக அமைப்பையும் ஆணின் மேலாதிக்கத்தையும் புறக்கணித்து வாழத் தலைப்பட்டவர்கள். பாலியல் உரிமையும்> தன்னின அனுபவமும் குழந்தைகளின் கூட்டுப் பாதுகாப்பும் இவர்களின் செயற்பாடுகளில் சிலவாகும். இந்நிலையில் சுமதிரூபனின் சில பாத்திரங்கள் குடும்ப அமைப்பைப் புறக்கணித்துத் தனித்தன்மையுடன் வாழத் தலைப்படும் தீவிரவாதப் பெண்ணியத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கிறது.

‘அவன் அப்படித்தான்’ என்ற கதையும் ஒருபாலியல் உறவு குறித்த கதைதான். சத்தியனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். ஆனால் அவன் தனது நண்பனுடன் கொண்ட உறவின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றான். மேலைத்தேய கலாசார சூழலில் ஏற்பட்டு வந்துள்ள இந்த மாற்றம் சியாம் செல்வதுரையின் Funny Boy நாவலை தழுவி எழுதப்பட்ட கதையாக அமைகின்றது. தனிமனிதனின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும் என்பதை கதை குறித்து நிற்கின்றது.

சோதனை முயற்சியாக எழுதப்பட்ட கட்டிடக் காட்டுக்குள் என்ற குறியீட்டுக் கதையில் கூறப்படும் கருத்தில் தெளிவு போதாமை தொpகிறது. பெண்ணிலைவாத சிந்தனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகளிலும் ஏனையவற்றிலும் யதார்த்தம் பேணப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்ச் சூழலில் சில கதைகள் பலத்த விமர்சனங்களை முன்வைக்க களம் அமைத்துள்ளன.

இவ்வகையில் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை முன்வைத்துள்ள இத்தொகுப்பில் இதுவரை பேசப்படாத பிரச்சனைைகளின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய வாழ்வியற் சூழல் இவ்வாறான கருத்துக்களை சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் பெண் படைப்புலகிற்கு வலுச்சேர்க்கும் படைப்பாக ‘யாதுமாகி நின்றாள்’ திகழ்கின்றது எனலாம்.

நன்றி :- தினகரன் வாரமலர்

Tuesday, March 24, 2009

ஆழியாளின் துவிதம்








சு. குணேஸ்வரன்………………..

‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் மிகுந்த கவனிப்புக்கு உள்ளாகியிருக்கும் தற்கால இலக்கிய உலகில்@ இக்கவிதைத் தொகுதி புலம்பெயர்ந்த ஈழத்தமிழாpன் படைப்புக்களுக்கு வலுச்சேர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.

பெண்-மொழி-கவிதை: மொழிசார் சாலைப் பயணம் என்ற தெ. மதுசூதனனின் ஆழமான தொடக்க அறிமுகத்துடன் அழகான அமைப்பில் அமைந்துள்ள இக்கவிதைத் தொகுப்பில் மொத்தம் 24 கவிதைகள் அமைந்துள்ளன.

கவிதைகள் அனைத்திற்கும் தாயக வாழ்வும் புலம்பெயர் தேசத்து வாழ்வும் இணைந்த உணர்வுநெறி அடிப்படையாக அமைந்துள்ளது. சில கவிதைகளில் இரண்டையுமே வேறுபிரித்து அறியமுடியாதபடிக்கு அதன் உள்ளுணர்வு பின்னிப் பிணைந்துள்ளது.

ஆழியாளின் கவிதைகள் அனைத்தும் சுட்டுகின்ற பொருட்பரப்பு முக்கியமானது. இத்தொகுப்பினூடாக தாயக வாழ்வின் ஞாபக அடுக்குகளில் இருந்து பல உணர்வு வெளிகள் விரிகின்றன. வாழ்வு பற்றிய பிடிமானமும் அதற்கான எத்தனமும் இந்தச் சூழலிலிருந்து மெல்ல மெல்ல விலகுவதும்> புலம்பெயர் தேசத்தில் அந்நியமாகிப் போன வாழ்வு நிலையும்> பெண் தன்னையும் தன் உணர்வுகளையும் வெளிப்படுத்துதலும்> பெண் தன் தனித்துவத்தைக் கட்டமைத்தலுமாக இத்தொகுப்பின் கவிதைகள் பல வழிகளில் பயணிக்கின்றன.

பெண் ஒடுக்குமுறையும் அதற்கெதிரான எழுச்சியும்> பெண் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்தலுமாக இதுவரை பயணித்து வந்த பெண் படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வளவு து}ரம் முக்கியமோ@ அதே அளவு பெண் தனக்கான மொழியைக் கட்டமைக்கும் சிந்தனையும் அதற்கான செயற்பாடுகளும் தற்கால இலக்கிய உலகில் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண் தன்னை தன் எழுத்துக்களுக்கூடாக மறுபிரதி செய்தலும் தன் உணர்வுகளையும் தன் மொழியையும் எழுதுதலாயும் உள்ளது. இது காலம் காலமாக இருந்த தடத்தை அழித்து புதிய தடத்தை எற்படுத்தும் நிலை. இதன் ஒரு அம்சமாகத்தான் ‘இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடலை உருவாக்க வழியில்லை’ என்று பெண்ணியல் திறனாய்வாளரான ஹெலன் சீக்ஸீஸ் (Helene Cixous) எழுதியுள்ளார். இதனாலேயே பெண்> பெண்உடல்> பெண்மொழி என்பன இன்றைய இலக்கியச் சூழலில் மிகுந்த விவாதத்திற்கு உட்பட்டிருக்கின்றது. பெண்கள் தமக்கான மொழியைக் கட்டமைப்பதன் மூலம் தமக்கான விடுதலையைச் சாத்தியமாக்க முடியும் என்ற சிந்தனையும் இன்று வலுப்பெற்று வருகின்றது. இவற்றை மனங்கொண்டுதான் ஆழியாளின் படைப்பினை நோக்கமுடியும்.

காமம்> விடுதலை> தடம் இதுபோன்ற பல கவிதைகளை ஆழியாளின் பெண் மொழிக்கு உதாரணமாகக் காட்டலாம். ‘தடம்’ என்ற கவிதையில்

“வெகு இயல்பாய்

என் தடமழியும்

வள்ளம்

பதித்த நீர்ச் சுவடு போல

காற்றுக்

காவும்

மீன் வாசம் போல

கடற்கரைக் காலடியாய்

வெகு இயல்பாய்

என்; தடமழியும்

நாலு சுவருள்

ஒற்றப்படும்

மென் உதட்டு முத்தம் போலவும்

எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும்.

வெகு இயல்பாய்

என் தடமழியும்

ஒளி விழுங்கின வானவில்லாய்.”

தனது முதலாவது தொகுப்பிலேயே ‘என் ஆதித்தாயின்/ முதுகில் பட்ட/ திருக்கைச் சவுக்கடி/ நான் காணும் ஒவ்வொரு/ முகத்திலும்/ தழும்பாய் தேமலாய்/ படர்ந்து கிடக்கிறது’ என்ற பிரகடனத்துடன் கவிதை எழுதியபோதே கவனிக்கப்பட்டவர் ஆழியாள். துவிதம் தொகுப்பில் அமைந்துள்ள ‘காமம்’ என்ற பிறிதொரு கவிதையில்

“உயரும்

மலையடிவார மண்கும்பிகளுள்

திணறி அடக்கமுறும்

மனித மூச்சுகளும்

பள்ளங்களின்

ஆழப்புதைவில்

அலறி ஓயும் குரல்களின்

இறுதி விக்கல்களும்

உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு

இருளுக்கு கூர் விழிகளும் உண்டு

பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்

உண்டு இன்னொன்று

அவளுக்கு.”

ஆழியாளின் கவிதைகளின் பலமே அதன் மொழிதான். ஆணாதிக்க மொழியில் இருந்து விடுபட்டு பெண்கள் தமக்கான மொழியை உருவாக்குதலும் இவரின் படைப்புநெறியாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். தமிழ்ச்சூழலில் அம்பை> மாலதி மைத்திரி> குட்டிரேவதி> சுகிர்தராணி> சல்மா> புகலிடத்தில் ரஞ்சனி> சுமதிரூபன் ஆகியோரின் எழுத்துக்களில் இதற்கான எத்தனத்தை தற்காலத்தில் அவதானிக்கமுடியும்.

தாயக வாழ்வு தந்த போரின் வலிகளைப் பதிவுசெய்யும் கவிதைகளில் ‘சி;ன்னப்பாலம்’ கவிதை ஏனைய பல கவிதைகளுக்கு தொடர்ச்சியாய் அமைந்துள்ளது. அது கொண்டு வரும் படிம அடுக்குகள் முக்கியமானவை. அதில் வெளிப்படும் குரூரம் காட்சிப்படிமாகத் தொடர்வதனை கவிதையின் வாசிப்பினூடாக கண்டுகொள்ளலாம். இது போன்ற உணர்வு வெளிப்பாடுகளை பல ஈழக்கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சேரனின் ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ கவிதையில் எலும்புக்கூடுகள் அணிநடையாகச் சென்ற பின்னரும் தொடரும் ஓசை ஒழுங்குபோல் ஆழியாளின் இந்தக் கவிதையிலும் தொடர்கிறது. இதனை அதியதார்த்தக் (Surrealism) கவிதைகளில் வெளிப்படும் பண்புக்கு இணையாக ஒப்பிடலாம்.

“------------------------------

சின்னப் பாலத்தடிக்கு

நித்தம் செட்டை அடித்து வந்தன

வழக்கத்திலும் கொழுத்த

ஒற்றைக்கால் கொக்குகளும்> சுழியோடும் நீர்க்கோழிகளும்.

அவற்றிலும் அதிகமாய்

விளைந்து கிடந்தன

ஊறி அழுகிய பிணங்களின்

வாசனை முகர்ந்து> சுவை அறிந்த

ஜப்பான் குறளிகளும்> குறட்டை பெட்டியான் மீன்களும்.

கபறக்கொய்யாக்களோ

எவ்வித நிர்ச்சலனமுமின்றி

நீரிற் பொசிந்து}றிய மனிதக் கபாலங்களை

ஆளுக்கு ஐந்து ஆறாய்ப்

பங்கிட்டுக் கொண்டன – சண்டை சச்சரவின்றி

சமாதானத்துடனே.

தேவைப்படும்போது

அவை பின்னிற்பதில்லை

தம் நாவால் மனிதக் கட்குழிகளை நீவிக்

கறுத்த விழிகளைத்

திராட்சைகளாய் உறிஞ்ச.

---------------------------”

இவை தவிர ஆழியாளின் கவிதைகளில் அந்நியமும் தனிமையும் வெளிப்படுவதையும் அவதானிக்கலாம். ‘மரணம்’ என்ற கவிதையில் அவர் தனது தனிமையை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் உவமை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

“கலங்கரை விளக்கத்து

இரவுக் காவலாளியாகவும்

ஆறடிக் குழியுள்

மெளனம் புடைசூழ இறக்கப்பட்ட

பிணமொன்றைப் போலவும்

தனித்தே

மிகத் தனித்தே இருக்கின்றேன்.”

கொடூரமான கனவுகளே வாழ்வாகிப் போன நிலையில் கவிதை சார்ந்த அழகியலும் சூழல் சார்ந்தே இயங்குவதனைக் கண்டு கொள்ளலாம். இது இவரது அதிகமான கவிதைகளுக்குப் பொருந்தக்கூடியது. சின்னப்பாலம்> கி.பி.2003 இல் தைகிரீஸ்> மரணம்> ஞாபக அடுக்குகள் ஆகியவற்றில் வரும் படிமங்கள் முக்கியமானவை.

உணர்வும் தர்க்கமும் இழையோடும் கவிதைகளில் அவை வெளிப்படுத்த விளையும் பொருட்பரப்பும் அதன் அழகியலும் மிகக் கட்டிறுக்கமாக பல கவிதைகளில் அமைந்துள்ளன. குறியீட்டு அர்த்தமுடைய கவிதைகள் வாசிப்பில் பல அர்த்தத் தளங்களுக்கு இடங்கொடுக்கின்றன.

கவிதைகளின் அர்த்தத்திற்கு ஏற்ப சில கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சாத்தியமில்லாத பந்தி பிரிப்பு தவிர்த்திருக்கக்கூடியதே. சின்னப்பாலம்> விமானநிலையச் சந்திப்பு ஆகியவற்றில் வரும் இறுதி இரண்டு பந்திகளுமே அவை.

அதிகளவான பெண் படைப்பாளிகள் தொடர்ந்து எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் முன்வைக்கப்படுவதுண்டு. இது படைப்பு நெறி சார்ந்து நோக்கும்போது பெண் படைப்பாளிகளிடம் இருக்கும் முக்கிய குறைபாடாகும். அந்த நிலையில் இருந்து விடுபட்டு தொடர்ச்சியாக தனது படைப்பைச் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஆழியாளுக்கும் உண்டு. அதற்குரிய வீச்சும் புதிய விளைவும் ஆழியாளிடம் நிரம்பவே உள்ளன என்பதை வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புக்களுமே நிரூபிக்கின்றன. இந்த வகையில் புலம்பெயர்ந்த பெண் கவிஞர்களின் படைப்புக்களில் கவனத்திற்கு உட்படுத்த வேண்டியதும் ஈழத்தமிழ்ப் படைப்புக்களில் தவிர்க்க முடியாததுமான ஒரு தொகுப்பாக துவிதம் அமைந்துள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

thanks:- jeevanathy magazine jaffna,thinnai.com

புலம்பெயர் சஞ்சிகைகள்










சு. குணேஸ்வரன்………………..

அறிமுகம்

ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய வகையின் வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அவற்றினை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாகும்.

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர் இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 1980 களில் முனைப்புப்பெற்ற இலங்கை இனப்போராட்ட சூழலின் விளைவாக மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இலக்கிய முயற்சிகளே இன்று ‘புலம்பெயர் இலக்கியம்’ என்று அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது.

உலகிலே பல்வேறு இன மக்களும் தமது உள்நாட்டுப்போர் காரணமாகவும் அரசியல் அச்சுறுத்தல் காரணமாகவும்> பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையிலே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுகளும் இன்று உலகப் பரப்பில் பேசப்படும் ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து> சுவிஸ்> பிரான்ஸ்> ஜேர்மனி> ஒல்லாந்து> டென்மார்க்> சுவீடன்> இத்தாலி> நோர்வே ஆகிய ஐரோப்பிய ஸ்கண்டிநேவிய நாடுகளிலும்@ வட அமெரிக்காவில் கனடாவிலும் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பெருமளவான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் இலக்கிய ஆர்வமும் அதன்பாலான ஈடுபாடும் சமூக நோக்கும் உள்ளவர்களால் இவ்வாறான இலக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றினூடாக தமிழர்தம் அடையாளத்தையும் தமிழின்> தமிழ்ப்பண்பாட்டின் பேணுகையையும் எதிர்காலச் சந்ததிகளுக்கு கையளிக்கும் முயற்சியாகவே அவர்களின் கலை இலக்கியம் சார் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இவற்றினை வெளியுலகுக்கு கொண்டுவர புலம்பெயர் சஞ்சிகைகள்> பத்திரிகைகள் உறுதுணையாக இருந்துள்ளன.

சஞ்சிகைகளின் தோற்றத்திற்கான பிரதான காரணம்

1983 யூலை கலவரங்களின் பின்னர் கூர்மையடைந்த இனப்பகைமை நிலை காரணமாக குறிப்பாக இளம்வயதினர் ஈழத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மாத்திரமல்லாது இலங்கையின் பிற பிரதேசங்களிலும் வாழ்வது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அகதிச் சமுகமாக ஆக்கப்பட்டனர். அத்தோடு புகலடைந்த தேசங்களில் தாம் அந்நியப்பட்டுப் போனதாகவும் உணரத்தலைப்பட்டனர்.

இனம்> மதம்> மொழி> பண்பாடு மட்டுமன்றி புவியிற் சூழலினாலும் முற்றிலும் மாறுபட்ட தேசத்தில் தமது பிரச்சனைகளைத் தாமே பேசிக் கொள்ளவும் தம் இனத்தவர்களிடம் (தாயகத்திலும்> தமிழகத்திலும்> புலம்பெயர்ந்த பிறநாடுகளிலும்) தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சமூகத்திற்கு@ முதல்முதலில் தமது பிரச்சனைகளைத் தாமே எழுத களம் தேவைப்பட்டது. அதனாலேயே சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தோற்றம் பெற்றன.

சஞ்சிகைகள் குறித்து...

இதுவரை நான் தேடிப்பெற்ற தகவல்களின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகை சஞ்சிகைகள் இன்றுவரை புலம்பெயர் இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ளமை தொpயவருகின்றது. ஆனால் அவற்றுள் எல்லாமே தற்போது வெளிவருவனவல்ல. ஆகக் குறைந்தது ஒரிரு இதழ்களுடன் தமது பயணத்தை முடித்துக்கொண்ட சஞ்சிகைகளும் உள்ளன. ஏறத்தாள 20 இலிருந்து 30 வரையிலான பத்திரிகை> சஞ்சிகைகளே சமகாலத்தில் வெளிவருவதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக சிறுசஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் அவை ஜனரஞ்சக இதழ்களாகவோ அல்லது அதிக வாசகர்களைக் கொண்ட இதழ்களாகவோ அமைய வாய்ப்பில்லை. மாறாக காத்திரமான விடயங்களைப் பரிமாறும் களங்களுக்குரிய இடமாகவே அவை அமைந்திருக்கும்.

இவற்றுள் பத்திரிகைகளும் உள்ளடக்கம். அவற்றுள் நாளாந்த வாராந்த மாதாந்த பத்திரிகைகளும் உள்ளன. அவற்றுள்ளும் வர்த்தக விளம்பரத்தை நோக்கமாகக் கொண்டு இலவசமாக வெளியிடப்படும் பத்திரிகைகளும் கணிசமானவை வெளிவருகின்றன. இவை பற்றி பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிடும்போது@

“இற்றைவரை ரொறன்ரோவி;ல் வெளிவந்த பத்திரிகை> சஞ்சிகைகள் என்பவற்றின் வரிசையில் உலகத்தமிழ்> செந்தாமரை> விளம்பரம்> தமிழர் தகவல்> தாயகம்> நான்காவது பரிமாணம்> ழகரம்> வீணைக்கொடி> சூரியன்> உதயன்> தமிழர் செந்தாமரை> முழக்கம்> நம்நாடு> ஈழநாடு> ஈழமுரசு> முரசொலி> சுதந்திரன்> தென்றல்> உலக தமிழோசை> அமுதம்> தினத்தமிழ்> வீடு> ஆத்ம ஜோதி> தேசியம்> தங்கத்தீபம்> பரபரப்பு முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஓரிரு வெளியீடுகளுடன் ஓய்ந்த பத்திரிகை களுமுள்ளன…………………... உதயன்> தமிழர் செந்தாமரை> முழக்கம் ஆகிய பத்திரிகைகள் சுமார் 100 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் வர்த்தக விளம்பரங்கள் பக்கங்களை நிரப்புகின்றன. பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரியான தாயகச் செய்திகள்> வெவ்வேறு தலையங்கங்களுடன் வெளிவருகின்றன” (1)

இதனாலேயே காத்திரமான விடயங்களைத் தாங்கி வருபவற்றுள் பத்திரிகைகளை விட சஞ்சிகைகள் முதன்மையாக அமைந்துள்ளன. அவற்றில் சில சஞ்சிகைகளை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் மாதாந்த இருமாத காலாண்டு அரையாண்டு சஞ்சிகைகளும் உண்டு. சில சஞ்சிகைகள் ஆண்டு வெளியீPடுகளாவும் வெளிவருவது உண்டு. கல்லூரிகள்> சங்கங்கள்> அமைப்புக்கள் என்பனவும் செய்திப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. (இவற்றுள் ஆண்டு மலர்கள் கருத்திற்; கொள்ளப்படவில்லை. அவை தனித்த பார்வைக்குரியன)

1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘து}ண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. து}ண்டிலிலேயே ஜேர்மனியில் இருந்து பார்த்திபன் எழுதிய புலம்பெயர் ஆரம்பகால நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்தன. வேறும் சில சஞ்சிகைகள் நாவல் மற்றும் குறுநாவல் என்பவற்றைத் தொடராக வெளியிட்டன.

சஞ்சிகை வெளியீடுகளில் அதிகமானவையும் குழுவாக வெளியிடும் நிலைதான் உள்ளது. இலக்கிய வட்டங்கள்> அமைப்புக்கள்> சங்கங்கள் ஊடாகவும்> பல எழுத்தாள நண்பர்கள் இணைந்து வெளிவருவனவும்> தனிப்பட்ட நபர்களின் முயற்சியி;ல் வெளிவருவனவும் உள்ளன.

தற்போது கனடாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘காலம்’ என்ற சஞ்சிகை கவிஞர் செல்வத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்றது. 90 இல் இருந்து வெளிவரத் தொடங்கிய ‘காலம்’ இன்றுவரையும் வெளிவருகின்றது. ஈழ> புலம்பெயர் படைப்பாளிகள் மட்டுமன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழகப்; படைப்பாளிகளும் இச்சஞ்சிகையில் எழுதி வருகின்றனர்.

பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாக வெளிவந்த ‘எக்ஸில்’ என்ற சஞ்சிகை வெளிவந்து நின்றுவிட்டது. எக்ஸிலில் முன்னர் வெளிவந்த படைப்புக்கள் இணையத்தில் exilivre.comஎன்ற இணையத் தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றது. இந்த வெளியீட்டகத்தினூடாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருமாவளவன்> கலாமோகன்> சிவசேகரம்> சக்கரவர்த்தி ஆகியோரின் ஒவ்வொரு நூல்களும்@ மறையாத மறுபாதி என்ற புகலிட பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும் இவற்றுள் முக்கியமானவை.

மறைந்த கலைச்செல்வன் மற்றும் லஷ்மி ஆகியோரின் முயற்சியில் பிரான்சில் இருந்து வெளிவந்த மற்றுமொரு சஞ்சிகையே உயிர்நிழல். ‘உயிர்நிழல்’ சஞ்சிகை முதலில் வெளிவந்து நின்றுபோனது. பின்னர் கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக வெளிவந்து தனது வரவை உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸில்> உயிர்நிழல் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் நவீன தமிழ் இலக்கியத்தின் அண்மைக்கால இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கி மிகக் காத்திரமான பணியை புலம்பெயர் படைப்புலகில் ஆற்றியுள்ளன. பின்நவீனத்துவம்> தலித்தியம்> பெண்ணியம்> எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து தமது கவனத்தைத் திருப்பிய சஞ்சிகைகளாக இவை அமைகின்றன.

சக்தி> கண்> ஊதா ஆகிய சஞ்சிகைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு ஊடாக வெளிவந்தவை. அதேபோன்று தற்போது பல சஞ்சிகைகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலமே வெளி வருகின்றன. பெண்கள் சஞ்சிகைகள் பற்றி றஞ்சி அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்திற்கு உரியது.

“15 வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அனேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக்கப்பட்டன. பிரான்சிலிருந்து ‘கண்’ என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டு வரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது. தொடர்ந்து ‘ஊதா> பெண்கள் சந்திப்பு மலர்> சக்தி’ போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும் இன்னும் ‘மறையாத மறுபாதி> புது உலகம் எமை நோக்கி> ஊடறு’ போன்ற தொகுப்புக்களும் வெளிவந்தன. புகலிட வாழ்வு> பெண்ணியம்> விளிம்புநிலை மாந்தர்கள்> தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள்> தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனங்காட்டின.” (2)

சில சஞ்சிகைகள் தனித்த பார்வைக்குரியன. பிரான்சில் இருந்து வெளிவந்த ‘அம்மா’ சஞ்சிகை சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து நின்று போனது. நான் அறிந்தவரையில் 13 இதழ்கள் வரையில் காணக்கிடைத்தது. 1997 பங்குனியில் ‘அம்மா’ வின் 1 வது இதழ் வெளிவந்துள்ளது. 2001 இல் இதன் 13 வது இதழ் வெளிவந்துள்ளது. வெளிவந்த இதழ்களில் சராசாpயாக 5 கதைகளாவது வந்துள்ளன. அப்படிப் பார்த்தால் 75 கதைகளாவது தேறும். அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்த இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றவையே. இந்த வகையில் ‘அம்மா’ புலம்பெயர் இலக்கியப் படைப்புலகில் சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்திய சஞ்சிகையாக அமைந்துள்ளது.

‘சமர்’ பிரான்சிலிருந்து ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை. இதில் கவிதை> சிறுகதை> எவையும் வெளிவந்ததாகத் தொpயவில்லை. கட்டுரை மற்றும் அரசியல்சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக வெளிவந்தது. நான் அறிந்தவரையில் 31 இதழ்கள் 2002 வரை வெளிவந்துள்ளன. இது தவிர ‘அரசியல் பொருளாதார கலாசார இதழாக’ வெளிவந்த புதுமை என்ற சஞ்சிகையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்து நின்று விட்டது.

எழுத்தாளர் க. நவம் (எழுத்தாளர் தெணியானின் சகோதரர்) ஆசிரியராகப் பணியாற்றிய ‘நான்காவது பரிமாணம்’ கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகும். கலை இலக்கிய காலாண்டு இதழாக 1991 செப்ரெம்பரில் இருந்து 1994 ஏப்ரல் வரை 13 இதழ்கள் மாத்திரமே இதுவரை வெளிவந்துள்ளன. பின்னர் இதுவும் நின்றுவிட்டது. இது வெளிவந்த காலப்பகுதியில் பல நூல் வெளியீடுகளை@ குறிப்பாக ஆரம்பத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு அவை சார்ந்த கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனரஞ்சகமாக வெளிவந்த பல இதழ்களும் உண்டு. அத்துடன் இந்தியாருடே பாணியிலும் வெளிவந்து நின்று போன இரண்டு சஞ்சிகைகள் பார்க்கக் கிடைத்தன. லண்டனில் இருந்து வெளிவந்த ‘உலக தமிழோசை’> ‘உலகத் தமிழ்’ ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் கலை இலக்கியம் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளையும் உள்;ளடக்கி வெளிவந்தது. இதனாலேயே எந்தவொரு வாசக மட்டத்திலும் நிரந்தரமாக தமக்கென ஓரிடத்தை தக்க வைக்க முடியாத நிலை இவற்றுக்கு ஏற்பட்டு விட்டது. தற்போது இவை இங்கு கிடைப்பதில்லை.

புலம்பெயர் படைப்புலகில் வெளிவந்த சஞ்சிகைகள் கலை> இலக்கியம்> விமர்சனம்> அரசியல்> பெண்ணியம்> மாற்றுக்கருத்து> சிறுவர் இதழ்கள்> ஆற்றுகைக்கலை> ஆன்மீகம்> வர்த்தகம் என்றவாறு சிறப்புப் பண்புகளைப் பெற்று வந்துள்ளமை தொpயவருகின்றது. இந்தச் சஞ்சிகைகள் யாவும் முழுமையாக ஈழத்தில் கிடைக்காத நிலையிலே இவை பற்றிய பகுப்பாய்வினை மேற்கொள்ளுதல் மிகக் கடினமான ஒரு பணியாகவே அமைகிறது. ஈழத்தில் ஆவணப்படுத்த வேண்டிய பல்கலைக்கழக நூலகங்களுக்கோ அல்லது பொதுசன நூலகங்களுக்கோ (யாழ். பல்கலைக்கழக நூலகத்திலே எக்ஸில்> அம்மா> சமர்> மண்> ஆகியவற்றின் சில இதழ்கள் மட்டுமே பார்க்கக் கிடைக்கின்றது) இச்சஞ்சிகைகளின் பிரதிகளை வெளியீட்டாளர்களும் படைப்பாளிகளும் பொறுப்புணர்வுடன் அனுப்பிவைக்காதது ஒரு குறைபாடே. இந்நிலை இவை பற்றிய முழுமையான ஆய்வுகளுக்குத் தடையாக அமைந்துள்ளன.

இந்த வகையில் தற்போது வெளிவரும் சஞ்சிகைகளாக உயிர்நிழல்> காலம்> மண்> நுட்பம்> குவியம்> இனி> உயிர்மெய்> காற்றுவெளி> முற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தொடர்ச்சியாக வெளிவரும் மேலும் சில சஞ்சிகைகளும் உள்ளன. இலத்திரனியல் ஊடகமான இணையத்திற்கூடாகவும் அதிகமான இணைய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன.

இதுவரை புலம்பெயர் படைப்புலகில் தடம் பதித்த சஞ்சிகைகள்/பத்திரிகைகள்

பிரான்ஸ் (36)

அசை> அம்மா> அநிச்ச> ஆதங்கம்> ஈழமுரசு> உயிர்நிழல்> உறவுகள்> எக்ஸில்> எழில்> எரிமலை> ஐரோப்பிய முரசு> ஓசை> கதலி> கண்> கம்பன்> குமுறல்> சமர்> சிந்து> சிரித்திரு> சுட்டுவிரல்> தமிழன்> தமிழ் முரசு> தமிழ்த் தென்றல்> தாயகம்> தேடல்> பள்ளம்> பாரிஸ் ஈழநாடு> பாரிஸ் ஈழமுரசு> பகடைக்காய்களின் அவலக்குரல்> புன்னகை> புதுவெள்ளம்> முற்றம்> மெளனம்> வடு> வண்ணை> வான்மதி.

ஜேர்மனி (30)

அக்கினி> அறுவை> இளைஞன்> இரவல் து}ண்டில்> ஈழமணி> ஊதா> ஏலையா> கலைவிளக்கு> சிந்தனை> சிவத்தமிழ்> சிறுவர் அமுதம்> தமிழ் அருவி> தளிர்> தாகம்> தாயகம்> தமிழ் நாதம்> து}ண்டில்> தென்றல்> தேன்> நமது இலக்கு> நமது குரல்> பாரிஸ் ஈழமுரசு> புதுமை> புதுயுகம்> பூவரசு> மண்> மலரும் மொட்டுக்கள்> வண்ணத்துப்பூச்சி> வெளிச்சம்> வெற்றிமணி.

இங்கிலாந்து (25)

அலை ஓசை> ஈழகேசாp> உயிர்ப்பு> உலக தமிழோசை> காற்றுவெளி> சுடரொளி> தமிழ் ஒலைகள்> தமிழர் தகவல்> தமிழன்> தமிழ் அகதி> தமிழ் உலகம்> தாகம்> தேசம்> நாளிகை> பனிமலர்> பாரிஸ் ஈழமுரசு> புதினம்> புலம் ஐ.பி.சி> மீட்சி> வான்முரசு> வெளி> Journal of Eelam Studies, Race and Class, Tamil Times, Tamil Nation .

சுவிஸ் (5)

ஊசி இலை> தமிழ் ஏடு> தமிழ்நாடு> பாரிஸ் ஈழமுரசு> மனிதம்.

டென்மார்க் (5)

அரும்பு> இனி> கற்பகம்> காகம்> சஞ்சீவி.

நோர்வே (5)

உயிர்மெய்> சுவடுகள்> சக்தி> சர்வதேச தமிழர்> பறை.

நெதர்லாந்து (6)

அ ஆ இ> உரிமை> சமநீதி> சுமைகள்> செய்திக்கதிர்> தமிழ்ஒளி.

கனடா (39)

அமுதம்> ஆத்மஜோதி> ஈழநாடு> ஈழமுரசு> உதயன்> உலக தமிழோசை> உலகத் தமிழர்> கனடா ஈழநாடு> காலம்> குவியம்> சிறுவர் கதைமலர்> சுதந்திரன்> சூரியன்> செந்தாமரை> தங்கத்தீபம்> தமிழர் செந்தாமரை> தமிழர் தகவல்> தாயகம்> தினத்தமிழ்> தேசியம்> தேடல்> தென்றல்> நம்நாடு> நான்காவது பரிமாணம்> நுட்பம்> பரபரப்பு> பார்வை> புரட்சிப் பாதை > பொதிகை> மறுமொழி> முரசொலி> முழக்கம்> ரோஜா> வானவில்> விளம்பரம்> வீடு> வீணைக்கொடி> வெற்றிமணி> ழகரம்.

அவுஸ்திரேலியா (13)

அக்கினிக்குஞ்சு> அவுஸ்திரேலிய மரபு> அவுஸ்திரேலிய முரசு> இன்பத்தமிழ்> ஈழமுரசு> உணர்வு> உதயம்> கதிர்> கலப்பை> தமிழர் உலகம்> தினமுரசு> பாரதி சிறுவர் இதழ்> மரபு.

மேலும் (11)

அஞ்சல்> உலகத்தமிழ்> ஓலை> குருத்து> சுட்டுவிரல்> திருப்பம்> துளிர்> பாலம்> புதினம்> மண்> மேகம்.

சஞ்சிகைகளின் உள்ளடக்கம்

இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள சஞ்சிகைகளில் கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை> சிறுகதை> தொடர்கதை> நூல் மதிப்பீடு> நூல் அறிமுகம்> விமர்சனம்> கட்டுரை> வாசகர் கருத்து> அரசியல்> மாற்றுக்கருத்து> எதிர்வினை> ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளிவந்தன.

இவை ஒவ்வொரு சஞ்சிகைகளின் இலக்கிற்கு ஏற்பவும் மாறுபடும். பெண்ணியக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி வெளிவந்த சக்தி> கண் ஆகியவற்றின் உள்ளடக்கத்திற்கும் சமர் சஞ்சிகையின் உள்ளடக்கத்திற்கும் உயிர்நிழல் காலம் என்பவற்றின் உள்ளடக்கத்திற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு. அவற்றை வெளியிடும் குழுவின் கருத்தியலுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கம் மாற்றமுறுவதைக் கண்டு கொள்ளமுடியும்.

இவை எவற்றையும் மனங்கொள்ளாமல் தமிழகத்தின் ‘குமுதம்’> ‘ராணிமுத்து’ பாணியில் வெளிவரும் சஞ்சிகைகளும் புலம்பெயர் இலக்கிய உலகில் உண்டு. அவை பெரிதும் தமிழ்நாட்டு வெகுஜன கலாசாரத்தின் தாக்கத்திற்கு உட்பட்டிருத்தலையும் கண்டு கொள்ளலாம்.

சஞ்சிகைகளின் அமைப்பு

ஆரம்பத்தில் வெளிவந்த சில சஞ்சிகைகள் கையொழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு அவை போட்டோப்பிரதி எடுக்கப்பட்டு வெளிவந்தன. பின்னர் தட்டச்சு செய்யப்பட்டு போட்டோபிரதி எடுக்கப்பட்டும்@ அதன் பின்னர் றோணியோ செய்யப்பட்டும் பல சஞ்சிகைகள் தமது பணியைத் தொடர்ந்தன. பின்னரே அவை அச்சுவடிவம் பெற்றன. தாயகம்> சக்தி> புதுமை ஆகிய சஞ்சிகைகள் எனக்குப் பார்க்கக் கிடைத்தபோது மேற்கூறிய நிலையில் இருந்துதான் அவற்றின் வளர்ச்சி ஆரம்பமாகியது. இது ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகளுக்கும் பொருந்துவதாக அமையலாயிற்று. சிறிது காலத்தின் பின்னரே அச்சுவடிவம் பெற்ற சஞ்சிகைகளை காணமுடிந்தது.

தமிழகத் தொடர்புகள் கிடைத்தபோது வெளியீட்டாளர்கள் தமது சஞ்சிகைகளை தமிழகத்தில் பதிப்பிக்கவும் செய்தனர். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல சஞ்சிகைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக அச்சுப்பதிக்கப்பட்டு வெளிவருகின்றன. அநிச்ச (இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. இது பற்றிய விபரத்தை கீற்று (www.keetru.com) இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது.) உயிர்நிழல்> காலம்> ஆகிய சஞ்சிகைகள் அண்மைக்காலத்தில் மிகுந்;த அழகுடனும் காத்திரமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

20செ.மீ×15செ.மீ அளவுகளிலேயே ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகள் அமைந்திருந்தன. இவை A4 அளவுள்ள தாள்களில் போட்டோபிரதி எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்ததனாலும் கைக்கு அடக்கமான அளவாதலாலும் இந்த அளவுடைய சஞ்சிகைகள் பெரிதும் விரும்பப்பட்டனவாக இருந்திருக்கலாம். சமர்> தாயகம்> சக்தி> ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவிலேயே அவை நின்றுபோகும் வரையும் வெளிவந்தன. இவை தவிர 26செ.மீ×18செ.மீ > 28செ.மீ×22செ.மீ இவற்றை அண்மிய வடிவத்திலும் பல சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. மெளனம்> காலம்> எக்ஸில்> உயிர்நிழல்> நாண்காவது பரிமாணம்> கண்> அம்மா ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவுகளில் வெளிவந்ததைக்கு உதாரணமாகும்.

இன்னமும் தாண்டவேண்டியவை

சஞ்சிகைகள்; தாண்டவேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக எல்லா சஞ்சிகைகளும் சேரவேண்டியவர்களுக்கு போய்ச் சேருவதில்லை. என்பது முக்கிய குறைபாடாகும். ஏற்கனவே ஒரு சஞ்சிகையில் பிரசுரமான ஆக்கம் மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் பெறுவதும் சஞ்சிகைகளின் குறைபாடுகளுக்கு மற்றுமொரு காரணமாகும். இவற்றில் பல எடுத்த எடுப்பிலேயே நின்றுபோவதற்கு@

‘குழுவிற்கான வேலைத்திட்டம்> நடைமுறைப் பிரச்சனைகள்> வாழ்நிலை முரண்பாடுகள்> பிரமுகர்த்தனம்> போலித்தன்மையான தியாக வெளிப்பாடுகள்> தலைமைக்கான போட்டி> சிலரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற சிலரின் அதீத வேட்கை என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்’ (3)

என்ற கூற்றும் சஞ்சிகைகள் தொடர்ச்சியாக வெளிவராமைக்கு ஒருசில காரணங்களாக அமைந்துள்ளன. எப்படியாயினும் ஆளற்ற தனித்த தீவுகள் போல் ஆகிவிட்ட புலம்பெயர் படைப்பாளிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய இந்தச் சஞ்சிகை வெளியீடுகள் ஒரு களமாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒரு இதழ் வெளிவந்து நின்று போனாலும்கூட அதற்கூடாக அவர்களின் வாழ்வு பதிவாகி காலம் தாழ்த்தியேனும் உரியவர்களுக்கு கிடைக்க ஒர் ஊடகமாகவே இவை அமைந்திருக்கின்றன. இந்த முயற்சிகள் வரவேற்க வேண்டியனவே.

அவற்றின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக இணைய சஞ்சிகைகள்

கடந்த ஆண்டுகளில் இந்தச் சஞ்சிகைகளின் வரவு குறைந்துவிட்ட நிலையிலே தகவல் தொழில்நுட்பத்தை புலம்பெயர் படைப்பாளிகள் மிகப் பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு சான்றாக தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இணைய சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.

‘இணைய வலைப்பதிவுகள்’ என்றதொரு புதிய அத்தியாயம் அண்மைக்காலத்தில் உலகெங்கும் வலுப்பெற்று வருகின்றது. இணையத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென தனியான வலைப்பதிவுகளை (blogs)உருவாக்கி உலாவ விட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலையினை இணையத்தில் உலாவரும் சஞ்சிகைகளும் தனித்தனியான இணையத் தளங்களும் நிரூபிக்கின்றன.

இன்று இவற்றின் இன்னொரு கட்டமாக ‘இணைய சஞ்சிகைகள்’ மிக அதிகளவாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அவற்றுள் ஏற்கனவே அச்சுவடிவம் பெற்றவை தவிர அதிகமும் புதிய பெயர்களைத் தாங்கி வெளிவருகின்றன. ஏறக்குறைய நாற்பது வரையான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இது மேலும் அதிகாpத்துக் கொண்டு செல்கின்ற போக்குத்தான் தற்போது உள்ளது. தமிழகத்தினைச் சேர்ந்த சு துரைக்குமரன் இணைய சஞ்சிகைகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு ஒன்றினையே மேற்கொண்டுள்ளார். இந்தச் செயற்பாடு இணைய சஞ்சிகைகளின் வளர்ச்சியை நாம் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு மேலதிக தகவலாக அமைகின்றது.

இணைய சஞ்சிகைகளில் பல தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் இருந்தும் வெளிவருகின்றன. இவற்றுள் இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு படைப்பாளிகள் கலந்துறவாடுவது தொpகின்றது. இது ஈழத்தமிழ் இலக்கியம் ‘சர்வதேசிய இலக்கிய உலகு’ என்னும் பெரும்பரப்புக்குள் கலந்துறவாடும் நிலையாகக் கொள்ளலாம். ‘திண்ணை’ இணையத்தளத்தில் தமிழகப் படைப்பாளிகளுடன் அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளும் எழுதிவருகின்றனர். இவை தவிர ‘மரத்தடி> ஆறாம்திணை> தோழி> அம்பலம்> என இன்னமும் பல தமிழக இணைய சஞ்சிகைகள் வெளிவருகின்றன.

“உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு பண்பாட்டு நாகாpக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.”(4)

என்ற மேற்படி துரைக்குமரனின் கூற்றுக்குப் பொருந்துவதுபோல் புலம்பெயர்ந்தவர்களின் இணைய சஞ்சிகைகள் விளங்குகின்றன. புலம்பெயர் படைப்பாளிகளின் இணைய சஞ்சிகைகளாக ‘பதிவுகள்> அநிச்ச> தமிழ் அலைகள்> அலைகள்> உயிர்நிழல்> எக்ஸில் லீவர்> சாரல்> ஊடறு> கீற்று> சத்தியக்கடதாசி> நி;ச்சாமம்> ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர ஒவ்வொரு எழுத்தாளருமே தமக்கென புதிய தளங்களையும் ஆரம்பித்து வருகின்றார்கள். பொ. கருணாகரமூர்த்தி தனது படைப்புக்களை ‘தமிழ்க்குடில்’ என்ற தளத்தில் இணைக்கத் தொடங்கியுள்ளார். ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை அவரின் சத்தியக்கடதாசி (satiyakadatasi.com) தளத்தில் முழுவதுமாக வாசிக்கக் கூடியதாக உள்ளது. அதேபோல் கனடாவில் இருந்து எழுதும் வ.ந.கிரிதரனின் பதிவுகள் (pathivukal.com) தளத்தில் அவரது நூல்களை வாசிக்க முடியும். சேரனின் எழுத்துக்கள் சிலவற்றை அவரது தளத்தில் (cheran.net) பார்க்கக்கூடியதாக உள்ளது. இவையெல்லாம் இலத்திரனியல் ஊடகம் நமக்குத் தந்துள்ள சுலபமான வழிவகைகளாகும்.

எனினும் இணைய சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களின் போதாமை குறித்த கருத்துக்களும் இலக்கிய உலகில் உண்டு. இதில் ஓரளவு உண்மையும் உண்டு என்பதனை இணைய சஞ்சிகைகளை பார்வைக்கு உட்படுத்துபவர்கள் அறிவார்கள். மேலும் இணைய சஞ்சிகைகளின் அமைப்பு> அவற்றின் எழுத்துரு என்பனவும் இவற்றின் சில குறைபாடுகளாக உள்ளன. ‘யுனிகோட்’ எழுத்துருவுக்கு அதிகமானவர்கள் மாறியுள்ள போதிலும் இவற்றை இன்னமும் கருத்திற் கொள்ளாத இணைய இதழ்கள் வாசகர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.

தொகுப்பாக

எனவே புலம்பெயர் இலக்கியம் பற்றிய முழுமையான ஆய்வுமுயற்சிகளின்போது புலம்பெயர் சஞ்சிகைகளின் பண்பும்> அவற்றின் பணியும் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டியனவாக அமைந்துள்ளன. அந்தவகையில் இன்று பல தடைகளையும் தாண்டி பொறுப்புணர்வுடன் வெளியிடப்படும் சஞ்சிகைகள் மூலமாகவே சமகால புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியை அறிந்து கொள்ள முடியும். அவற்றின் கனதியும் தொடர்ச்சியான வருகையும் தமிழ்ச்; சூழலுக்கு மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன.

புலம்பெயர் சஞ்சிகை பத்திரிகைகள் புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு 80 களின் நடுப்பகுதியில் இருந்து தமது பணியை ஆற்றத் தொடங்கியுள்ளன. இன்று அவற்றில் பெரும்பாலானவை நின்றுபோன பிறகும்கூட அவை பதித்துச் சென்ற தடங்கள் முக்கியமானவை. அவற்றின் படிப்படியான வளர்ச்சியினாலேயே ஈழத்தமிழர்களின் உணர்வுகள் பேசப்பட்டன. தமிழகம் தாண்டியும் அனைத்துலக மட்டத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை அவை கொண்டு சென்று சேர்த்துள்ளன. இவையெல்;லாம் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் சாதாரணமாகத் தட்டிக்கழிக்க முடியாதவை என்பதும் எதிர்காலத்தில் ஆய்வு முயற்சிகளுக்கு வழிசமைக்கக்கூடியவை என்பதும் முக்கியமான குறிப்பாகும்.

அடிக்குறிப்புக்கள்

(1) பாலசுந்தரம். இ போராசிரியர் - 2005. ‘ரொரன்ரோவில் தமிழ்ப் பத்திரிகைகள் - ஒரு நோக்கு’ குவியம் கனடா. ப.33

(2) றஞ்சி (சுவிஸ்) - 2006 மார்ச் ‘புலம்பெயர் நாடுகளில் பெண்ணியக்

கருத்துக்கள்’ உயிர்நிழல் இதழ் 22 பிரான்ஸ் ப.43

(3) தயாநிதி - 1999 செப் 2-15 சாpநிகர் கொழும்பு ப.8

(4) துரைக்குமரன். சு - 2006 யூலை 13 13 www. thinnai.com

Sunday, March 22, 2009

பொ. கருணாகரமூர்த்தி படைப்புக்கள்; - ஒரு பார்வை












சு. குணேஸ்வரன்…………….

புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் பொ. கருணாகரமூர்த்தி முக்கியமானவர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.

இக்கட்டுரை கருணாகரமூர்த்தியின் ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற மூன்றுகுறுநாவல்களைக் கொண்ட தொகுப்பினையும்@ கிழக்கு நோக்கி சில மேகங்கள்> அவர்களுக்கென்று ஒரு குடில் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இவை தவிர ‘பெர்லின் இரவுகள்’ என்ற கட்டுரை நூலும்> கூடு கலைதல் என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன.


எண்பதுகளில் தோற்றம் கொண்ட புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பகாலப் படைப்புக்களில் தாயக நினைவும் அதனோடு இணைந்த வாழ்வுச் சூழலுமே அதிகம் பதிவாகியிருந்தன. பின்னர் அவை படிப்படியாக வரித்துக் கொண்ட புதிய அநுபவங்களையும் புலம்பெயர் இலக்கியம் பேச முற்பட்டபோதே தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த கவனத்திற் கொள்ளப்பட்டன.

ஒரு அகதி உருவாகும் நேரம் (1994) என்ற குறுநாவல் ஊடாக தமிழகத்திலும் இலங்கையிலும் நன்கு அறியப்பட்ட பொ. கருணாகரமூர்த்தி தன் படைப்புக்களுக்கு வரித்துக் கொண்ட கதைக் கருக்கள் முக்கியமானவை.

1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்.
2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப் பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்.
3. பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள்.
4. போரினால் வாழ்வின் விளிம்பில் து}க்கி வீசப்பட்ட மானிட உணர்வுகள்;.
5. கர்மா பற்றிய விசாரணையும் வாழ்வும்.

வாழ்வு வசப்படும் என்ற குறுநாவல் ஜேர்மனிக்கு அகதியாய்ப் புலம்பெயர்ந்து ஒரே அறையில் வசித்து வரும் இளைஞர்களின் வெவ்வேறுபட்ட மனவுணர்வுகளையும் செயற்பாடுகளையும் சித்தாpக்கின்றது. ஒரு வகையில் ஜெயமோகன் கூறுவதுபோல்

‘ஏறத்தாள எல்லாக் கதாபாத்திரத்திலும் ஆசிரியர் சீராக ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். கீழைத்தேய கலாசாரத்தில் வளர்ந்த மனிதர்கள் மேலைத்தேய கலாசாரத்தை எதிர்கொள்ளும் தத்தளிப்புதான் அது.’

இதனை பெண் நிலைப்பட்ட கதைகளிலும் சாp> பண்பாட்டு நெருக்குவாரத்தை சந்திக்கும் கதைகளிலும் சாp ஆசிரியர் முன்வைத்துள்ளார்.

பர்வதங்களும் பாதாளங்களும் என்ற கதையில் புலம்பெயர்ந்த தேசத்தில் வளர்ந்த பிள்ளைகளுடன் வாழும் ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய நியாயமான அச்சங்களை கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுவது கவனத்திற்குரியது.

“மனதை சபலிக்க வைக்கும் முத்தங்கள்> தழுவல்கள்> உரசல்கள் கலந்துள்ள டி.விப் படங்களை பார்க்கின்றனர். இரவில் பதினொன்றுக்குமேல் ஆர்.டி.எல். பிளசும் பார்ப்பார்களோ? அச்சமாயிருக்கு! இரண்டுங்கெட்டான் வயதில் உணர்ச்சி உத்வேகத்தால் தடுமாறும் சில பேதைகள்> தம்போல் இரட்டிப்பு வயதான ஆப்கானிஸ்தான் காரனுடனும்> சீக்கியனுடனும்> மூன்று பிள்ளைகளைப் பெற்ற அரபுக்காரனுடனும் அவசர முடிவெடுத்து ஓடிப்போகுதுகள்! கர்ப்பமாகி அவர்கள் திரும்பி வருவதைப் பார்த்து பதைக்கும் பெற்றோரைப் பார்க்கவே முடிவதில்லை! பரிதாபமாயிருக்கு! பள்ளித் தோழர்களால் கர்ப்பமாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகாpக்கின்றது. அதிர்ச்சியாகவுள்ளது.” (கிழக்கு நோக்கி சில மேகங்கள்> ப.107)


பெண்நிலைப்பட்ட கதைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் முரண்பாடுகள் தனித்த பார்வைக்குரியன. இவரின் கதைகளில் வரும் பெண்கள் நவீனத்துவத்தின் சாயலே படியாத குக்கிராமத்திலிருந்து (அக்கரையில் ஒரு கிராமம்) பெண்ணியச் சிந்தனைகளைப் பேசும் (பால்வீதி) துணிச்சலான பெண்வரை உள்ளனர்.

இந்தப் பெண்களை மூன்று வகையாக நோக்கலாம். மாற்றத்தை அறியாத பெண்> ஒத்துப்போகும் பெண்> துணிச்சலான பெண்> என்ற வகையில் எடுத்துக் கூறலாம். மற்றெல்லாவற்றையும் விட பாலியல் ரீதியில் பெண் சுரண்டலுக்கு உட்படுதலை மிக நுண்மையாக எடுத்துக் காட்டுகின்றார். இவற்றுக்கு ஆவுரஞ்சிகள்> ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும்> வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்> பேதையல்ல பெண்> ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம்.

ஆவுரஞ்சிகளில் வரும் பென்சனியர் சமூகத்தில் தன்னைப் பெரிய மனிதராகக் காட்டிக்கொண்டு செய்கின்ற நடத்தைப் பிறழ்வுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக சிங்களப் பெண்கள் பற்றிய சித்தாpப்பு புலம்பெயர் இலக்கியத்தில் மிக அரிதாகவே கூறப்பட்டுள்ளது. அதனை பொ. கருணாகரமூர்த்தி ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும் கதையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல் என்ற கதையில் தாய்லாந்தில் இருந்து இளைஞர் ஒருவரால் அழைத்து வரப்படும் பெண்ணும் கூட முடிவில் அவனிடமிருந்து விலகி இன்னோர் வடிவத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாதல் சித்தாpக்கப்பட்டுள்ளது.

போரால் வாழ்வின் விளிம்புக்கு து}க்கி வீசப்பட்ட மாந்தர்களின் உணர்வினைப் பேசும் படைப்புக்களும் கவனத்திற்குரியன. இனப்போராட்ட சூழலில் யாழ்ப்பாணத்தில் பெரும் இடப்பெயர்வின்போது மக்கள் சந்திக்கின்ற இன்னல்கள் சோகம் ததும்ப அவர்களுக்கென்று ஒரு குடில் என்ற கதையில் காட்டப்படுவதிலிருந்து> ஜேர்மனிய தெருக்களில் அலையும் வாழ்வைத் தொலைத்த மாந்தர் வரை கருணாகரமூர்த்தியின் கதைகளின் தளம் விரிகின்றது.

ஒரு அகதி உருவாகும் நேரம் குறுநாவலில் வரும் சட்;டநாதன் இறுதிவரை வாழ்வின் ஏமாற்றங்களுடனேயே வருதல் உள்@ர மனத்தில் அமுங்கிய சோகத்தையே வரவழைக்கி;ன்றது. இதனைத் தனியே இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதையாக மட்டுமல்லாமல் உலகப் பொதுமை பெறும் அளவில் நசிபடும் மானிடர்களின் அவலமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாம் உலகப்போரின் வடுக்களில் இருந்து இன்னமும் மீளமுடியாத மூதாட்டியும் இனவாதத்தால் தோற்கடிக்கப்பட்ட சுண்டெலி கதாபாத்திரமும் தெருப்பாடகனாக அலைந்து திரியும் ஏழைக்கலைஞனும் கூட வாழ்வின் விளிம்புக்கு து}ரவீசப்பட்ட மாந்தர்களே.

அதுமட்டுமல்லாமல்> இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள்> பிறதேசங்களின் ஒடுக்குமுறையிலிருந்து தஞ்சமடைந்த துருக்கியர்> பாகிஸ்தானியர் ஆகியோருடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் முரண்பட்டு வாழ்கின்றபோதிலும்> இறுதியில் அவர்களும் கூட அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட நிலையில் அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும்போது பிரச்சனையின் கனம் ஒன்றாகத்தான் உள்ளது.

இது இன்றைய புலம்பெயர் இலக்கியம் சர்வதேசிய மானிடர்களின் அனுபவங்களையும் பேசும் அளவிற்குத் தனது எல்லைகளை விரித்துக் கொண்டமைக்குச் சான்றாக அமைகின்றது.

அறிவுக்கும் ஆத்மிகத்திற்கும் இடையிலான உரையாடலாக அமையும் பால்வீதி> போதிமரம்> ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரணை ஆகிய கதைகளில் கர்மா பற்றிய விசாரணை உள்ளது. மனித சமூகத்தையே ஆட்டுவிக்கும் இன்னல்களுக்கு கர்மாவே காரணம் என்பதைக் கதைகளில் சுட்டும் கருணாகரமூர்த்தி பல சிந்தனைகளை முன்வைக்கின்றார். ஆனால் ‘விடுதலைக்குப் போராடும் யாருக்கும் மனதளவில் பெருந்தடையாக கர்மாக் கோட்பாடே நிற்கும்’ எனக் கூறும் கவிஞர் இன்குலாப்பின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

எமது மதங்கள் பாரம்பரியமாகக் கட்டிக் காத்துவரும் கருத்துக்களுக்கும் வாழ்வியலுக்கும் இடையில் நிரம்ப முரண்பாடுகள் உண்டு. இதனை எடுத்துக் காட்டுவதில் கருணாகரமூர்த்தி விடைகூறமுடியாத தருணங்களும் உண்டு. அவற்றை மையப்படுத்தியும் மேற்குறிப்பிட்ட கதைகள் அமைந்துள்ளன.

தனக்கேயுரிய பாணியில் கதைகூறும் ஆசிரியர் கதைக்களத்திற்கு ஏற்ப சில கதைகளில் மொழியை செம்மையாகக் கையாண்டுள்ளார். வடிவச் சிறப்புமிக்க பல கதைகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் கருணாகரமூர்த்தியின் படைப்புகள் புனைகதை உலகிற்கு வளம் சேர்க்கக்கூடியவை. குறிப்பாக தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானங்கள் அந்நிய கலாசாரத்தில் திசைமாறிச் செல்லும் அபத்தநிலையையும்> நசிபடும் மானிடங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சர்வதேசிய பொதுமை பெறும் பல கதைகளையும் தந்துள்ள வகையில் கணிப்பிற்குரிய படைப்பாளியாக பொ. கருணாகரமூர்த்தி திகழ்கின்றார் எனலாம்.